பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

171


என்னும் ஒரே படர்க்கை வினைமுற்று இடத்தைப் பொறுத்து அவன் போகிறான், அவள் போகிறாள், அது போகிறது என்று மூன்று வகையாகவும் பொருள்படும். இத்தகைய திணை, பால், எண், இடம்ட தெளிவாக இல்லாத சமசுக்கிருதம் எப்படித் தேவமொழியாகும்? மேலும் தூய தனித்தமிழ்ச் சொற்களை ஒலி மாற்றியும், திரித்தும், கடைக்குறைத்தும் சமசுக்கிருதம் என்று கூறி வந்த பொய் பித்தலாட்டத்தைத் தமிழர்கள் இன்னும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்க முடியாது. ஆயிரக்கணக்கான சொற்களை இதுபோல் காட்டலாம். எடுத்துக்காட்டுக்குச் சில சொற்கள். (இவை பாவாணரின் ஆராய்ச்சி வெளிப்பாடுகள்).

தமிழ் வ. சொல்
அக்கை அக்கா
அம்பலம் அம்பரம்
அரசன் ராஜன்
இடைகழி தேஹலி
உருவம் ரூப
உலகு லோக
உவமை உபமா
கரணம் கரண
கருமம் கர்ம
கலுழன் கருட
கன்னி கன்யா
காக்கை காக்க
காளி காலீ
குண்டம் குண்ட
கும்பம் கும்ப
கோபுரம் கோபுர
சவம் சவ
சவை சபா
சுக்கு சுஷ்க
கடிகை கடிக
திரு ஸ்ரீ
கலாவம் கலாப
தூதன் தூத
தோணி த்ரோணி
படி ப்ரதி
நிலையம் நிலைய
பாதம் பாத
பல்லி பல்லீ
பிண்டம் பிண்ட
புடவி ப்ருத்வி
புழுதி பூதி
புருவம் புருவ
பொத்தகம் புஸ்தகம்
மண்டபம் மண்டப
மயிர் சமச்ரு
மயில் மயூரி
மாத்திரை மாத்திர
முத்தம் முக்த
மெது மருது
வட்டம் வருத்த
சாயை சாயா
கடிகை கடிக
கலாவம் கலாப
சகடம் சகட
சடம் ஜடம்

மேலும், சமசுக்கிருதத்திற்கு முன்னர் வேத ஆரியர் பேசி வந்த வேதமொழியிலேயே தமிழ்மொழிக் கூறுகள் மிக்கிருந்தன என்று