பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

175


மொழியாக இருந்து உதவும் என்று காந்தியடிகள் கூறியதையும் பார்த்தசாரதிக்கு நினைவூட்டுகிறோம். (Calcutta ‘Modern Review’).

இனி, இறுதியாக,

தெய்வா தீனம் ஜத்ஸர்வம்
மந்த்ரா தீனந்து தைவதம்
தன்மந்த்ரம் ப்ரர்ஹ்மணா தீனம்
பிராஹ்மணா மம தைவதம்”

(இதன் பொருள்: உலகம் தெய்வத்துள் அடக்கம்; தெய்வம் மந்திரத்துள் அடக்கம்; மந்திரம் பிராமணருள் அடக்கம்; ஆதலால் பிராமணரே நம் தெய்வம்.)

- என்ற காலம் மலையேறி விட்டது. தேசியம், ஒருமைப்பாடு, ஒற்றுமை, இந்தியா என்றெல்லாம் பேசி ஆரிய இனத்துக்கும் மொழிக்கும் பிற இனத்தவரை, குறிப்பாகத் திரவிடரை, இன்னுஞ் சொன்னால் தமிழரை அடிமைப்படுத்தி அரசோச்சிய காலம் கழிந்து விட்டது; இனிமேலும் தமிழினத்தைப் பார்ப்பனர்க்கு மட்டுமன்று. உலகில் வேறு எந்த இனத்துக்கும் அடிமைப்படுத்திவிட முடியாது. தமிழினம் விழித்துக் கொண்டது; விழித்துக் கொள்கிறது; விழித்துக் கொள்ளும்! பார்த்தசாரதிகளும் துக்ளக்குக்கும் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

- தென்மொழி, சுவடி : 16, ஓலை : 6, 1980