பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


அதிகாரங்களைப் பெறவும் வாய்ப்புகள் அமைகின்றன. இவர்களுக்குத் துணைபோகும்படி இங்குள்ள சட்ட அமைப்புகளும், காவல்துறைக் கண்காணிப்புகளும் கலைத்துறை வாய்ப்புகளும் அரண்களாக அமைந்துள்ளதை எவரும் மறுத்தல் இயலாது. எனவே தான் இங்குத் தொழில்கள் வளர்வதில்லை. வேளாண்மைச் செழிப்பு ஏற்படுவதில்லை; பொதுமை மலர்வதில்லை; பொதுவுடைமை நாற்று விடுவதில்லை. இவற்றுக்கு அடிப்படையாக இருக்கும் முதலாளிய வல்லாண்மையையும், மத ஆளுமைகளையும் ஒழித்தாலொழிய அண்மை எதிர்காலத்தில் இங்குத் தோன்றி வளரும் மறுமலர்ச்சி நிலைகள், தலைதூக்கிச் செழிப்பது அருமையிலும் அருமை!

அறியாமையும் ஏழைமையும் மக்களை விலங்கு நிலைக்கு இட்டுச் செல்லும் இரண்டு கீழ்நிலைக் கோட்பாடுகள், பண்டைய அரசர்களாட்சிக் காலங்களில் இவ்விரு கோட்பாடுகளும் மக்களில் ஒரு பகுதியினரிடையே தேவை யென்றே கட்டிக் காக்கப்பெற்றன. ஏனெனில், அவர்கள் இவ்விரு அழிவுக் கூறுகளினின்றும் விடுபட்டு மேம்பாடும் வலிமையும் பெறுவார்களானால், தங்கள் மன்னர் மரபாட்சிக்கு அழிவுநேரும் என்பது அவர்கள் அச்சம். எனவே இவை அரசர்க்குரிய கோட்பாடுகளாக, சூழ்ச்சி மிகுந்த செல்வர்களாலும் மத வல்லாண்மை மிக்க புரோகித க் குருமார்களாலும் அறிவுறுத்தப்பெற்றுச், சாணக்கியம், மாக்கிய வல்லியம் முதலிய பொருள்நூல்களிலும், சுக்கிரநீதி, மனுநீதி முதலிய அறநூல்களிலும் வலியுறுத்தப் பெற்றன. இன்றுள்ள இந்திய அரசமைப்பும் மேற்கண்ட நூல்களுக்குப் பெரும்பாலும் மாறுபடாதவாறு வகுக்கப் பெற்றுள்ளதாலேயே, இந்நாட்டில் செல்வர்களுக்கும் மதவாளுளமைக்காரர்களுக்கும் இவ்வளவு கொடிய ஆளுமையும் அதிகாரங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நாடு உண்மையிலேயே முன்னேறி, மக்கள் சமநிலையும் நிகரமையும் பொதுவுடைமையும் எய்தி, மேம்பட்ட அரசியல், பொருளியல், குமுகாயவியல் ஆளுமை இங்கேற்பட வேண்டுமானால், செல்வர்களுக்குக் கையோக்கம் தருவதும், மதவாளுமைக்காரர்களுக்கு நடைத் தாராளம் ஏற்படுத்துவதுமான இப்பொழுதுள்ள அரசியல் திருடர்களினதும், குமுகாயக் கொள்ளையர்களினதுமான போலிக் குடியரசு ஆளுமை அறவே ஒழிக்கப்படல் வேண்டும். அதுவரை, தப்பித்தவறிப் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நாம் அனுப்பிவைக்கும் நல்லவர்கள் சிலரால், சிற்சில வேளைகளில், பற்பல கட்டுத் திட்டங்களையும் எதிர்ப்புகளையும் மீறிக் கொணரப் பெறும் சட்டதிட்டங்களும், நடைமுறைத் திருத்தங்களும் செயலற்ற வெறும்