பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


ஏன் சூடு சுரணை இல்லை? இவற்றைக் கேட்பதால் பூணுரல் திருமேனிகள் பொங்கியெழும் என்பதனால் வரும் ஊமைத்தனமா? அல்லது தமிழின மூடக் களஞ்சியங்களின் எதிர்ப்பு வரும் என்னும் தொடை நடுங்கித்தனமா? சிங்கப்பூர் முதலிய முன்னேறிய நாகரிகங் கொண்ட நாடுகளிலும்கூட, அண்டை வீட்டாருக்குக் கேட்கும்படி வானொலியை வைத்தாலும் குற்றம், அதற்குத் தண்டம், என்பது இங்குள்ள ஆட்சியாளர் அனைவரும் இல்லையாயினும், ஒரு சிலராகிலும் அறிந்திருக்க மாட்டார்களா ? இனி, அங்கு ஒலிபெருக்கிகளே தெருவில் கட்டக்கூடாது என்பது சட்டமன்றோ? அப்படி யெல்லாம் பொதுவொழுங்கைச் சரி செய்வதற்கு இங்கு என்ன நொட்டை அல்லது நோப்பாலம் வந்தது? இவர்கள் மேல் நாடுகளும் கீழ்நாடுகளும் போவது எதற்கு? வேடிக்கை பார்க்கவா? அல்லது இரவுநேரக் காட்சிகளைக் கண்டு நாக்கைச் சப்புவதற்கா? ஏன், அங்குள்ள சீர்திருத்தங்களை, பொதுவொழுங்கு நடைமுறைகளை. இங்கும் கொண்டுவரக் கூடாது? இதில் என்ன தயக்கம் அல்லது மயக்கம்.

இனி, கலைமகள்விழா வென்றும், கருவிப்பூசை யென்றும், இங்குள்ள அரசு அலுவலகங்களிலும், தனியார் அலுவலகங்களிலும் ஆண்டுதோறும் நடைபெறும் பார்ப்பனியர்களினதும், பார்ப்பன அடிமைகளினதும் தொல்லை கொஞ்சமா? அவற்றைப் பகுத்தறிவு பேசும் இவர்கள் ஏன் பின்பற்றக் கூடாது? தமிழ் எழுத்துகளில் மட்டுந்தானா - தமிழ் திறந்தமடம் என்பதாலும் - அது ஏதிலி போட்ட பிள்ளை என்பதாலும் கைவைத்துச் சிதைப்பது பகுத்தறிவு என்று கருதிக்கொண்டார்கள்!

இவை தவிர வேறு எத்தனை எத்தனை மத மூடச் செயல்கள் இங்கு நடைபெறுகின்றன! அவற்றால் அரசுக்கு எத்தனை இழப்பு! பொதுமக்கள் அனைவருக்கும் ஏற்ற பொதுவான செயல்களை மட்டும் ஊக்கி, அவரவர் விருப்பத்திற்கு அவரவர் வீடுகளிலோ அறைகளிலோ கவனித்துக்கொள்ள வேண்டிய மதச் செயல்களுக்கும், பொது இடையூறுகளுக்கும் ஏன் தடையிடக் கூடாது?

இவ்வேதுங்கெட்ட இந்திய நாட்டில், இங்குள்ள மக்கள் பெருக்கம் போலவே மதப் பெருக்கமும் ஏற்பட்டு வருகிறதே! இந்து மதம் என்ற இழவெடுத்த பார்ப்பன மதத்தில் மட்டும், சிவனியம்(சைவம்), காளியம் (சாக்தம்), மாலியம்(வைணவம்), முருகியம்(கௌமாரம்), ஆனைமுகவம் (காணபத்தியம்), கதிரவம்(சௌரம்) என்னும் வைதீகச் சார்பு மதங்களுக்கும், கபிலம், கணாதம், பதஞ்சலியம், அட்சபாதம், வியாசம்,