பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

189


ஆதரவையும் தரவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். அந்த வகையிலேயே, அண்மையில் குடந்தை நகரில் திராவிடர் கழகம் நடத்திய, பார்ப்பனர் வல்லாண்மை ஒழிப்பு மாநாட்டில் நாம் கலந்துகொண்டு, அதைத் தொடக்கி வைக்கவும் நேரிட்டது என்க.

இனி, இக்கால் ஆரியப் பார்ப்பனர்கள் தமிழர்களின் இன நல வுரிமைகளுக்கும் முன்னேற்றத்திற்கும் இடங் கொடுக்காத வகையில், நாடு முழுவதும் போராடி வருவது, மிகுந்த வருத்தத்துடனும், அக்கறையுடனும் கவனிக்க வேண்டியதும் உடனடியாக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுமான நிகழ்ச்சியாகவும் இருக்கிறது. பார்ப்பனர் எழுச்சி நம்மையெல்லாம் விழிப்புக் கொள்ளச் செய்திருக்கின்றது. நூற்றுக்கு மூன்று அல்லது ஐந்து பேராக உள்ள அவர்கள், பிற திரவிட இனத்தவரின் அனைத்து நலன்களையும் முற்றூட்டாகவும் முழுவுரிமையாகவும் கைப்பற்றி நுகர்ந்து வருவது அடாவடித்தனமும், அறக் கொடுமையானதும் ஆகும். புராண, இதிகாச கால முதல் இன்று வரை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், அரசியலின் பெயராலும், பார்ப்பனர்கள் வாழ்வு நலந்தரும் அனைத்துத் துறைகளிலும் வல்லாளுமை(ஆதிக்கம்) செய்து வரும் கொடுமையும் துன்பமும், அதன்கீழ் உழன்று, இழிக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் கிடக்கின்ற திரவிட இன மக்களுக்குத்தான் தெரியுமே தவிர, பிற இனத்தார்க்கோ, வெளிநாட்டவருக்கோ இம்மியும் தெரியாது. இப்படிப்பட்ட நிலையே தொடர்ந்து நீடிக்கப் பெற வேண்டும் என்பதே பார்ப்பனர்களின் கோரிக்கை என்பது, அண்மையில் நடந்து வரும் குசராத்து, இராசத்தான் முதலிய வட மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களால் தெரிய வருகிறது. இனி, தென்னாட்டிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் அவை போன்ற போரிாட்டங்களைத் தொடங்குவதற்குத் தென்னாட்டுப் பார்ப்பனர்களுளம் முயற்சியும் முனைப்பும் செய்வதாகத் தெரியவும் வருகிறது.

கடந்த காலங்களில் பார்ப்பனர்களால் தமிழர்களுக்கும் பிற திரவிட இனத்தவர்க்கும் நேர்ந்த துன்பங்களும் கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமன்று. கல்வி, தொழில், கலை, பண்பாடு, சட்டம், ஆளுமை, பதவி, அதிகாரம் முதலிய ஆட்சித் தொடர்புத் துறைகளிலும், செய்தித்தாள்கள், வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி முதலிய பொதுமக்கள் தொடர்புத்துறைகளிலும் பார்ப்பனர்களின் மேலாளுமையே பல நூறு மடங்கு மேலோங்கியுள்ளது. இதன் உண்மையை அவ்வத்துறைகளின் புள்ளி விளத்தங்களைப் பார்த்தால் நன்கு விளங்கும். பார்ப்பனரைத் தவிர மற்ற இனங்களுக்கோ, அஃதாவது சூத்திரர்களுக்கோ ‘பார்ப்பனனைப் பணிந்து அவனுக்குப்