பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


செய்தியும் அவற்றில் மருந்துக்குக்கூட இல்லை. மக்களை அறிவு வளர்ச்சியின் பக்கமே திரும்ப விடாமல் செய்யும் குருட்டுக் கொண்டாட்டங்கள் அவை! சிந்தனையின் மூடு விழாக்களே அவை ! எந்த மானமுள்ள அரசும் இவ்வார்ப்பரிப்புக் கொண்டாட்டங்களுக்கு ஆதரவு தர விரும்பாது. நம் நாட்டு நடுவண்(தில்லி அரசும், மாநில (அரைப்பார்ப்பன) அரசுந்தாம் மக்களை அறியாமையினின்று நீங்கிவிடாமல் செய்ய இவ்வாரவார விழாக்களுக்கு முழு ஆதரவு தந்து, அவற்றைக் காலங் காலமாகப் பாலூட்டி, நெய்யூற்றி வளர்த்து வருகின்றன. மூட நம்பிக்கைக்கு ஆதரவு தரும் எந்தச் செயலும் பார்ப்பனியத்தை வளர்ப்பதே !

இந்த நாட்டில் உள்ள பொதுவுடைமைக் கட்சிக் கோமாளிகளுங்கூட இந்த விழாக்களுக்கு ஏராளமான ஆதரவை தந்து, தங்களின் கொள்கை இளிச்ச வாய்த் தனத்தைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றனர். தீபாவளி போலும் மூட விழாக்களை எதிர்த்துப் பேசும் அல்லது எழுதும் எந்தப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரையும் இந்த நாட்டில் பார்க்க முடியாது, மொத்தத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி என்பது அரைப் பார்ப்பன, அரை மார்க்சீயக் கலவைக் கட்சியே! இந்த விழாக்களுக்கு எந்த அறிவியல் மக்களியல் காரணத்தையும் அக்கட்சி எடுத்துக்காட்டிவிட முடியாது.

எந்தக் கோணத்திலிருந்து கூட்டிப் பெருக்கிக் கழித்துப் பார்த்தாலும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும் - அஃதாவது அரைப் பார்ப்பன அரை மார்க்சியக் கட்சியும், பார்ப்பணியமுமே தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் ஒரு விரற்கடையும்(அங்குலமும்) முன்னேறவிடாமல் தடைபோட்டு அறிவுச் சலவை செய்து, சீர்குலைத்து வருகின்றன.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியானது எந்த மக்கள் முன்னேற்றக் கூறையும் மார்க்சியம் என்றே பறைசாற்றுகிறது. இதனுடன் நெருங்கிய தொடர்புடைய பார்ப்பனியமோ அனைத்து அறிவு நிலைகளும் வேதவழிப் பட்டனவே என்று கூசாமல் நாணாமல் பொய்யுரைத்துக் கொட்டமடித்துக் காட்டுகிறது. இரண்டு இயக்கங்களுமே வேறு மாந்த, மக்களினச் சிந்தனைகளை ஒப்புக் கொள்வதில்லை. இந்தத் தன்மையில்தான் இந்த நாட்டில், அந்த இருபெரும் ஆற்றல்களும் மக்களை அறிவாளுமை - அறிவாளிய முறையில் (இதுவும் ஒருவகை முதலாளியமே) மூளைச் சலவை செய்து தங்களுக்கு ஆதரவாக வைத்துக் கொள்ள விரும்புகின்றன!