பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இராசீவ்காந்தி நலத்துக்காக இரண்டு பெரிய வேள்விகள்!

நாட்டு மக்கள் நலனுக்காக என்று கூறிக்கொண்டு, இராசீவ் காந்தி நலம்பெற வேண்டும் என்று அண்மையில் தில்லியில் இரண்டு பெரிய வேள்விகளை(யாகங்களை)ச் செய்திருக்கின்றனர், அரசைச் சார்ந்தவர்கள், மக்களின் வரிப்பணம் எந்தெந்த வகையில் பாழடிக்கப் பெறுகின்றது என்று நன்கு உணர்ந்துகொள்ளுதல் வேண்டும்.

தில்லி, ‘சப்தர்சங்’ வீதி 15ஆம் எண் குடியிருப்பில் இந்த வேள்வி நடந்தது.

இதன் பொருட்டு, பெங்களூரிலிருந்து தனிச்சிறப்புத் தொடர்வண்டியில் 200 சடங்காசிரியர்கள்(புரோகிதர்கள்) தில்லிக்கு அழைத்து வரப்பெற்றனர்.

அவர்களுடன் சமையல்காரர்கள் பலர், நாதசுரக் குழுவினர், தொலைக்காட்சிப் படப்பிடிப்புக் குழுவினர் என்று சிறியதொரு கூட்டமே தில்லி வந்திருந்தது.

வேள்வியை நடத்த 10 ஆயிரம் தேங்காய்கள், ஏறத்தாழ 2,250 அயிர எடை(கிலோ) தூய்மையான ஆவின் நெய் தில்லிக்குக் கொண்டுவரப் பெற்றன.

பூசைக்கென 4000 உருபா மதிப்புள்ள பூக்கள் நாள்தோறும் வானூர்தி வழியாகத் தில்லி வந்திறங்கியது.

வேள்வியில் ஈடுபட்ட சடங்காசிரியர்(புரோகிதர்)களுக்கு நாள்