பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பார்ப்பனர்க்கு இரட்டைக் கொம்பு!

ன்றைய நிலையில் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டுக் காட்டுவதற்குக் கலைஞர் கருணாநிதி ஒருவரின் வலிவு மெலிவுச் செயல்களே அடிப்படையாகப் பார்ப்பனர்களால் எடுத்துக் கொள்ளப் பெறுகின்றன என்றால், பார்ப்பன இனத்தை ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டுக் காட்டுவதற்கு ‘துக்ளக்’ ஆசிரியர் சோ அய்யரையே எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். சரியாகவோ தவறாகவோ கருணாநிதி செய்யும், செயல்களே இவருடைய எழுத்துக்கும் துக்ளக் விற்பனைக்கும் அடிப்படைகளாக அமைந்திருக்கின்றன. கருணாநிதியைப் பற்றி ஒரு கட்டுரையோ பகடிப் படமோ (கார்ட்டுனோ) இல்லாமல் துக்ளக் வந்ததில்லை. அவ்வாறு வந்தாலும் அது விற்காது. எனவே இந்த உத்தியைக் கடைப் பிடித்தே, கருணாநிதியைப் பற்றி எழுதி அவர் தொண்டர்களிடத்திலேயே இதழை விற்பனை செய்து வணிகம் செய்வது ‘துக்ளக்’ சோவிற்கு இருக்கும் வேறு எந்தத் திறமையையும் விடக் கூடுதலான திறமையாகும்.

அண்மையில் தி.மு.க. நடத்திய இந்தியெதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி வேறு யாரும் கவலை கொண்டதைவிட, துக்ளக் சோ அய்யர் அதிகமாகக் கவலை கொண்டார் என்பதற்கு அப் போராட்டக் காலத்தில் வெளியான துக்ளக் இதழ்களே சான்றாக நிற்கும். இந்திப் போராட்டம் எந்த வகையிலும் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று சோ மிகமிகக் கவலைப்பட்டார்