பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

257


என்பதை அவர் எழுத்துகளிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். அது எங்கு வெற்றிபெற்றுவிடுமோ, பார்ப்பனர்களுக்கு எங்குத் தோல்வி தொடங்கிவிடுமோ என்னும் அச்சமும் கவலையும் அவரை மிகுந்த பரபரப்புக்குள்ளாக்கியிருக்கின்றன. எனவே இந்தியெதிர்ப்புப் போராட்டத்தின் ஒவ்வோர் அசைவையும் திருப்பத்தையும் அவருடைய முட்டை போன்ற கண்ணாடிக் கண்களால் நன்றாக ஊன்றிக் கவனித்துக் குத்தித் தோண்டி முகர்ந்து பார்த்துக் குதறி யெடுத்திருக்கிறார். வெறுமனே படுத்திருக்கும் நாட்டு நாய்க்கு ஒர் எலும்புத் துண்டு கிடைத்துவிட்டால் எவ்வாறு அது தாடை தேயக் கடித்துக்கொண்டு கிடக்குமோ, அப்படித் துக்ளக் சோ அய்யருக்கு இந்தியெதிர்ப்பு எலும்புத் துண்டு கிடைத்தவுடன் அதை இன்னும் விடாமல் மென்றுகொண்டு கிடக்கிறார். பார்ப்பனரில் அவர் ஒரு தனிவகை. காரம் குறையாத மூல(Original) பார்ப்பனிய ஆரிய முத்திரை(Brand), அவர்.

இராசாசி போன்ற பார்ப்பனர்தம் உளறல்களைத் தவிர, வேறு தமிழினம் சார்ந்த எவருடைய கருத்துகளையும் சிந்தனை என்று ஏற்றுக் கொள்ளாத இனத்தின் மூல உருவமாகிய துக்ளக் சோ, இந்தி யெதிர்ப்பை யொட்டிக் கருணாநிதிமேல் வீசிய கணைகளுக்குப் பெரியார் சிந்தனைகள் - மூன்றாந் தொகுதியும் பயன்பட்டிருக்கிறது என்பதை வைத்து, அவ்வினம் நம்மவரின் கைகளைக் கொண்டே நம்மவரின் கண்களைக் குத்திக் குருடாக்கும் சாணக்கியச் சூழ்ச்சிக்கு முழுக் குத்தகையெடுத்துள்ளது என்பதை முழு உண்மையாகக் கொண்டுவிடலாம்.

தி.மு.க.வின் இந்தியெதிர்ப்புப் போராட்டம் தொடக்கத்தில் அமர்க்களப்படுத்தப் பட்டதாம். இறுதியில் கோமாளித் தனத்தின் உச்சியை எட்டிப் பிடித்துவிட்டதாம். இவற்றைக் குறிப்பிட்டுவிட்டுப் போராட்டத்தின் தன்மை என்ன என்று சோ கணிக்கிறார் என்றால், “அது இரு தனி ஆள்கள் (நபர்கள்) இடையே இருக்கும் பகையின் காரணமாக நிகழும் சில்லறைச் சச்சரவுகளே என்பதைத் தமிழக மக்கள் உணரத் தொடங்கி (ஆரம்பித்து) விட்டார்கள் என்று தோன்றுகிறதாம்! (பார்க்க: துக்ளக் 15.1.1987 இதழ்) எப்படி சோ அய்யரின் சாணக்கிய மூளை மக்களின் சிந்தனைத் திறனைத் திசை திருப்புகிறது, பார்த்தீர்களா? இதுதான் பச்சைப் பார்ப்பனியம் என்பதற்குச் சிறந்த ஒர் எடுத்துக்காட்டு.

எந்த மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்? இவரைச் சேர்ந்த அய்யர், அய்யங்கார் இன மக்களா? அவர்கள் மட்டும் இல்லை; தமிழின மக்களும் அவ்வாறு நினைக்கிறார்கள் அவ்வாறு