பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
‘இந்து’ மதத்தினின்று வெளியேற வேண்டும்!

மதமற்ற நிலை, மதச் சார்பற்ற நிலை, தமிழ் மதம் சார்ந்த நிலை ஆகிய மூன்று கோட்பாடுகளில் தமிழினம் இயங்க வேண்டும்!
பார்ப்பனியமே இந்து மதம்! தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனியத்திற்கு அடிமைகளாக இருக்க ஒப்புக் கொள்பவர்களே, இந்து மதத்தை விரும்புகின்றனர். அவர்களுக்கும் விழிப்பூட்ட வேண்டும்!

இந்துமதக் கோட்பாடுகளே இந்தியாவின் அரசியலாக, பொருளியலாக, கலை, பண்பாடுகளாக, உருவாகியிருக்கின்றன என்று சொன்னால் எவரும் மறுத்து மெய்ப்பித்துவிட முடியாது. இந்துமதமே முழுவதும் பார்ப்பனீயத்தையே அடித்தளமாகக் கொண்டது. எனவே, இந்தியாவைப் பொறுத்த அளவில் பார்ப்பனீயம் இல்லாமல் அரசியல் இல்லை; பொருளியல் இல்லை; கலை, பண்பாடுகள் இல்லை. இன்னும் சொன்னால் மக்கள் தொடர்புள்ள வேறெதுவுமே இல்லை. மக்களுள்ளும் தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனீயத்திற்கு - பார்ப்பனர்க்கு அடிமைகளாக இருக்க ஒப்புக் கொள்பவர்களே, இந்துமதத்தை விரும்புகின்றனர்; அதை நிலைப்படுத்த முயற்சிகள் செய்கின்றனர். அவர்களுக்கு விழிப்பூட்ட வேண்டுவது நம் கடமை!

பார்ப்பனீயத்தின் எந்தக் கூறுமே ஒரு நச்சுமரத்தைப்