பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

271

பார்ப்பனியத்திற்கு எதிராக உள்ள அனைத்துக் கருத்துகளும் பரப்பப் பெற வேண்டும். அப்பொழுதுதான் போலிச் சமக்கிருதப் புன்மைகள் விளங்கும்.

வெறும் தமிழ் படித்த தமிழ்ப்புலவர்களால் இந்தப் பணியைச் செய்ய முடியாது. தமிழ் படிக்காத அறிஞர்கள் பிறராலும் இதைச் செவ்வனே செய்வது கடினம். அறிவியலும் தமிழும் படித்த மெய்யுணர்வாளர்களால் மட்டுமேதாம் நம் மக்களுக்கு உண்மை அறிவை ஊட்ட முடியும்.

- தமிழ்நிலம், இதழ் எண். 138, 1990