பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

தொலைக்கப்பட வேண்டும். பார்ப்பனர் தமிழர் என்பதால் பார்ப்பனர்க்கு ஊதியமென்றால், தமிழர்களுக்கு இழப்பன்றோ ஏற்படுகின்றது. மொழியாலும், இனத்தாலும், நாட்டாலும் ஏற்படும் அவ்விழப்பை எப்படித் தாங்கிக் கொள்வது? மேலும் பார்ப்பான் தமிழனென்றால் அவன் வீட்டுப் பெண்ணையும் நம் வீட்டுப் பையன் கட்ட அவனிசைய வேண்டும்; நம் வீட்டுப் பெண்ணை அவன் வீட்டுப் பையன் கட்டிக்கொள்ள மறுப்புச் சொல்லுதல் கூடாது. அவன் தன்னை உயர்வு என்பதையும், தன் தாய்மொழி சமசுக்கிருதம் என்பதையும் அவற்றிலுள்ள ஈடுபாட்டையும் அறவே விட்டுவிடுதல் வேண்டும். வாழ்க்கைப் பொதுநிலையில் அவன் எல்லாரையும் போலவே வாழ்தல் வேண்டும். இப்படி ஒரு நிலை ஏற்படும்வரை அவனுந் தமிழன்தான் என்னும் பேச்சை அடியோடு விட்டொழிக்க வேண்டும்.

வானொலிக் கொட்டங்கள் !

வானொலித்துறை அவர்கள் கைகளில் கிடைத்துவிட்டது என்பதற்காக அவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அடிக்கும் கொட்டங்களுக்கும் அளவேயில்லை. நாட்டிலுள்ள 35 பெரிய வானொலி நிலையங்களிலும் 12 சிறிய துணை நிலையங்களிலும் பெரும்பாலானவை அவர்கள் கையுள் ஒடுங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும் அருள் வாக்கு என்னும் பெயரால் அவர்களின் வேத, புராணப் பொய்யுரை புளுகுரைகளே பெரிதும் பரப்பப்படுகின்றன. இல்லை திணிக்கப்பெறுகின்றன என்றே சொல்லலாம். பிற சமயச் சமன்பாடு என்னும் போர்வையில் ஓரிரு கால் இசுலாமிய, கிறித்தவ மதக் கருத்துகள் சொல்லப் பெறுகின்றன. எனினும் அவற்றை யெல்லாம் எடுத்து விழுங்கும் அளவுக்கு இவர்களின் வேத புராணக் கருத்துகள் வலிந்து ஒலிபரப்பப் பெறுகின்றன. அதுவுமின்றி இடையிடையே ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளும் கருத்தளவிலோ மொழியளவிலோ தமிழ் இனத்திற்கு எதிர்ப்பாகவே இருக்கின்றன. அவற்றில் வரும் கதைகள், பாட்டுகள், நாடகங்கள், உரையாடல்கள் அனைத்தும் பார்ப்பனர் வீட்டுப் பழக்க வழக்கங்களை அடியொட்டியும், அவர் வழங்கும் சிதைவுச் சொற்களையும், இழுப்புச் சொற்களையும் கொண்டுமே விளங்குகின்றன.

வானொலிப் பாடல்களைக் கேட்கவே முடியவில்லை. திரைப்படங்களில் வரும் இழிந்த, அருவருப்பான இருபொருள் கொண்ட இழுப்புப் பறிப்பான கெக்கலிசை முக்கல் முனகலோசை