பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

“மேலும் புராணத்தின்படி, பிரம்மா உலகத்தில் உள்ள ஜீவன்கள் அனைத்தையும் அமிர்தம் கொண்ட மண்கலசத்தில் வைத்து பூஜை செய்யும்போது, பிரளய காலத்தில் கலசம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. அப்போது சிவபெருமான் வேடன் உருவத்தில் வந்து மண்கலசம் மீது அம்பு எய்தி உடைக்கிறார். ஜீவன்கள் உற்பத்தியாகி உலகம் தோன்றுகிறது. கலசத்தில் உள்ள அமிழ்தம் நாலா புறமும் தெறித்து ஒரு பக்கம் குவிகிறது. அவ்வாறு குவியும் இடம் தான் கும்பகோணம் மகாமகக் குளம் என்பதும் ஐதீகம்.”

இதுவன்றிக் கீழ்வரும் இன்னொரு விளம்பரமும் அரைப் பக்கத் தாளில், எல்லாச் செய்தித்தாள்களிலும் ஏறத்தாழ அதே 10.292-இல் வெளிவந்துள்ளதையும் அன்பர்கள் இணைத்துப் பார்த்திட வேண்டும்.

அவ் விளம்பரத்தின் தலைப்பில் காஞ்சி மடத்தின் பார்ப்பன மூஞ்சிகள் மூன்றும் (நேற்று, இன்று, நாளை) கள்ளச் சிரிப்புடன் காட்சியளிக்கின்றன. அவற்றுக்கு மேல்,

மனித சக்தியின் முயற்சிக்கு
தெய்வ சக்தியின் அருளாசி!”

என்னும் உரைகள் கொட்டை எழுத்துகளில் காணப்படுகின்றன இவற்றின்கீழ்,

“வெறும் உயிரைக் காக்க உழைக்கும் எங்களுக்கு ஆன்மாவையே காக்க அவதரித்த காஞ்சி காமகோடி ஜகத் குரு பூரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தங்களின் வேத பூர்வ பாத மலர்களை மலர் மருத்துவமனையில் பதித்து பொருள் தர சம்மதித்திருக்கிறார்கள்.”

- இவ் விளம்பரத்தை, சென்னையில் உள்ள மிகச் சிறந்த பார்ப்பன மருத்துவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் அவர்கள் ஆளுமையர்களாக (நிர்வாகிகளாக இருந்து பணியாற்றும் மலர் மருத்துவமனைத் திறப்பு விழாவின் அழைப்பு அறிவிப்பாகக் கொடுத்துள்ளார்கள்.

- இவ் விரண்டு விளம்பரங்களும், இந்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள், அவர்கள் ஆட்சியிலிருந்தாலும் சரி, வேறு தொழில்கள் நடத்திக் கொண்டிருந்தாலும் சரி, அவர்களின் பார்ப்பனீயக் கோட்பாடுகளைப் பரப்புவதிலும், அவற்றை