பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


இம் மதம் பயிற்று அதிகாரிகளுக்கான சம்பளம் 1300–40–2100 ஆகும். இத்துடன் அகவிலைப்படி, கூடுதல் அகவிலைப்படி, இலவய இருப்பிடம், இலவய உணவு, சீருடை, அவருக்கும் அவர் குடும்பத்தவர்க்கும், அவரைச் சார்ந்துள்ளோர்க்கும் இலவய மருத்துவ வசதி, மற்றும் விடுப்பு, போக்குவரத்துச் சலுகை, பிற உண்டிச் சாலை வசதிகள், பிற படைத்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பெறும் கூடுதல் படிகள் அனைத்தும் இவர்களுக்கும் உண்டாம் பணிக் காலத்திற்குப் பின் ஓய்வூதியமும் பிற சலுகைகளும் உண்டு.

எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? இந்த மதம் பயிற்றுவிப்பார் பணியில் இந்துமதம், கிறித்தவ மதம், இசுலாம் மதம், சீக்கிய மதம் முதலிய அனைத்து மதம் பயிற்றாசிரியர்களுளம் எடுக்கப் பெறுவதாக அறிவிப்பு வந்தாலும், பெரும்பகுதி இந்து மதவாசிரியர்கள்தாம் எடுக்கப் பெறுவர் என்பது எல்லாரும் அறிந்ததே! பிற மதங்களில் பெயருக்குச் சில பேர்கள் எடுக்கப் பெற்றாலும் அவர்களுடைய செயற்பாடுகள் மிகுதியாக இருக்கும்படி விட்டுவிடமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

இதில் இன்னொன்றும் உண்டு. இப்பதவிக்கு வருபவர்கள் சமசுக்கிருதம் அல்லது இந்தியில் அல்லது வட்டார மொழியில் தகுதியுடையவர்களாக இருத்தல் வேண்டும் என்று அறிவிப்பு கூறுகிறது. ஆனால் பணிவாய்ப்பு சமசுக்கிருதம், இந்தி தெரிந்தவர்களுக்குத்தான் மிகுதியாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

இவ்வாறு இந்தியாவில், இதுவரையில் இல்லாதபடி, இந்தியப் படைத்துறையிலும் இந்துமதம் பரப்புதல் - வல்லாளுமை - புகுந்து விட்டது. இதற்குக் காரணம் படைத்துறையில் உள்ள மேனிலை அதிகாரிகள், கீழ்நிலை அதிகாரிகள் ஆகியோரில் ஏதோ ஓரிருவரைத் தவிர, மிகப் பெரும்பாலோர் பார்ப்பனர்களே!

அவர்கள் ஏற்கனவே வானூர்தி கப்பல் முதலியவற்றை வெள்ளோட்டம் விடும்பொழுது அவர்களின் படைத்துறை நடவடிக்கைகளில் இல்லை என்றாலும், தேங்காய் உடைத்துக் கற்பூரம் ஏற்றிப் பூசைசெய்து படைத்து வரும் வகையிலும் பிற வாய்ப்புள்ள இடங்களிலும் மதச்சடங்குகளைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இவர்க்ளைப் போன்றவர்களுக்கு இப்புது மதம் பரப்புதல் நடவடிக்கை இன்னும் மதவெறியை வளர்ப்பதற்கு உதவும்.