பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


ஆரிய நூல்களில் தெளிவாகக் கூறப்பெற்றுள்ளன. அந்நூல் உட்பட எந்நூலையும், கலைகளையும், மறைகளையும் கற்று உணர்தற்கு உரியவர் பிராமணரே என்றும், பிறர் அவற்றைப் படிப்பதும், படிக்கக் கேட்பதுங்கூடக் கூடாவென்றும் கண்டிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் படிப்பவனும், படித்து அவற்றின் ஒழுங்கு முறைகளில் ஒழுகுவோனுமாகிய பிராமணனுக்கே இவ்வுலகம் முழுவதையும் கட்டியாளும் தகுதியிருக்கின்றது என்றும் கூறப்பெற்றுள்ளது.

பத்தே ஆண்டு நிரம்பிய பிராமணன்னைத் தந்தையைப் போலும், நூறு ஆண்டு உடைய ‘கூத்திரியனை’ப் பிள்ளையைப் போலும் மதித்தல் வேண்டும் என்றும் மனுநூல் கூறுகின்றது. இன்னும் அரசன் பிராமணரைக் கேட்டு அவர் கருத்துப்படியே அரசு செலுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் பிராமணரைக் கூப்பிட்டு, அவர்களுக்கு உள்ள குறைகளைக் கேட்டு, அவற்றை நீக்குவது அரசன் அன்றாடக் கடமைகளில் ஒன்று என்றும், அரசன் நோயுற்றவிடத்துப் பிராமணனே அரசவையை நடத்தத் தக்கவன் என்றும், நான்காம் இனத்தவனாகிய ‘சூத்திரனை’க் கொண்டு எந்த நாடு அரசாளப் பெறுகின்றதோ அந்நாடு சேற்றில் அகப்பட்ட மாட்டைப் போலத் துன்புற்று, வறுமைமிகும் என்றும், புதையல் பொருளைப் பிராமணன் தவிரப் பிறர் எடுத்தால் அப்பொருள் அரசனையே சாருமென்றும், பிராமணன் எடுத்தால் அஃது அவனுக்கே சொந்தமென்றும், மன்னனுக்குப் புதையல் கிடைத்தால் அதில் பாதியைப் பிராமணர்களுக்குத் தரவேண்டுமென்றும், குற்றம் செய்தவனை அவன் குலமறிந்தே தண்டிக்க வேண்டுமென்றும், பிராமணர் விருப்பத்திற்கு மாறாக எந்தத் தீர்ப்பையும் அரசன் சொல்லக்கூடாதென்றும், பிராமணனைக் காக்கும் பொருட்டு எவனும் எப்பொய்யைக் கூறினாலும் கரிசு(பாவமு)ம் குற்றமும் ஆகாவென்றும், பிராமணன் பொய் கூறினால் அவனை மன்னிக்க வேண்டுமென்றும், பிற மூவினத்தாரும் பொய் கூறினால் அவர்களை நாடு நடத்த வேண்டும் என்றும், பிராமணன் தவிர்த்த பிறரைக் கைக்குக் கை, காலுக்குக் கால், கண்ணுக்குக் கண், நாக்குக்கு நா, செவிக்கு செவி, உடலுக்கு உடல் சிதைக்க வேண்டுமென்றும், பிராமணனை மட்டும் எந்த வகையான காயம் படாமலும் அவன் சொத்துகளுடன் ஊரைவிட்டு துரத்திவிட வேண்டுமென்றும், பிராமணர்களை இழிந்த பிறப்பினனாகிய நான்காம் இனத்தவன் திட்டினால் அவன் நாக்கை அரசன் அறுத்தெறிய வேண்டுமென்றும், பிராமணன் அமரத்தக்க உயர்ந்த இடத்தில் சமமாக அமர்ந்தால், சூத்திரனின் இருப்புறுப்பையே அறுத்தெறிந்து, ஊரைவிட்டே ஓட்ட வேண்டுமென்றும், பிராமணனை அவன்