பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


உரியன என்று வக்கணை பேசி ஏய்த்துக்கொண்டு வரும் இவ்வாரியப் பார்ப்பனர்தம் கேடுகளை எடுத்து ஒவ்வொன்றாக விரித்துரைப்பதென்றால் ஏடும் காலமும் போதா. ‘கருநிறக் காக்கைக்கும் கல்நெஞ்சப் பார்ப்பனர்க்கும் உருவத்தில் மாற்றம் வேறொன்றில்லை' என்று பழம்பாடல் ஒன்று கூறுகின்றது. இவையெல்லாம் பழங்கதைகள் என்று கூறித் தள்ளுமாறில்லை.

அண்மைக் காலம் வரை அவர்களின ஆகாத போக்கிற்குப் போராடிய குமுகாயத் தொண்டர் பலர். இராவணணன் காலம் முதலாக இக்கால் பெரும் அளவில் குமுகாயப் போராட்டம் நடத்தி வரும் பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்கள் காலம் வரை இவர்களின் வல்லாண்மை ஓங்கியே வந்திருக்கின்றது. தன்மான இயக்கமும் பகுத்தறிவுக் கொள்கையும் வலிமிகுந்த இவ்விடைக் காலத்தில், மக்கள் ஒருவாறு பார்ப்பனரின் கொடுமைக்கும் சூழ்ச்சிக்கும் ஆட்படாமல் விழிப்புற்றனர் எனினும், இக்கால் அச் சூழ்ச்சியும் கரவும் மேலோங்கி வருவதைப் பார்த்தால் நம் போன்றவர்கள் வேறெதிலும் நாட்டம் செலுத்தவியலாமற் போகின்றது.

இற்றை மீண்டும் இப் பார்ப்பணியம் தலையெடுக்கத் தூண்டு கோலாயிருப்பவர்களுள் திரு. இராசாசியும், அவர்தம் குலக் காவலரான காமகோடி பீடாதிபதி சகத்குரு சங்கராச்சாரியார் அவர்களும், அவரைச் சார்ந்த வரும் பிற தமிழ் அடிமைகளுமேயாவர். அவர்களுக்கு உள்ள நோக்கமெல்லாம் அரசியல் பற்றியது மன்று; பொருளியல் பற்றியது மன்று. அவர்களுக்கிருக்கும் ஒரே கவலை தம் இனம் துன்புறக் கூடாது; தம் இனத்திற்கிருக்கும் தேவத் தன்மை குறைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான். இக்கொள்கை முறியடிக்கப்படும் பொழுது அதன் எதிர்புறத்திலிருப்பவர் காந்தியானாலும் சரி, வேறு எவரானாலும் சரி, அவர்களை அழிப்பதே அவர்களின் முழுநோக்கமாகும். திரு. இராசாசி அவர்கள் இக்கால் அறம் பிறழ்ந்துவிட்டது என்றும், அவ்வறத்தைச் சரி செய்யவே இதுநாள்வரை இறைவன் தம்மைப் பிழைக்கச் செய்து கொண்டு வருகின்றான் என்றும் அண்மையில் குறிப்பிட்டுள்ளார். இவர் அறம் என்று கூறியதற்கு அடிப்படைப் பொருள் இக் கட்டுரையின் முற்பகுதியில் கூறப்பெற்ற மனுநூலின் ஒழுகலாறுகளே! இவையெல்லாம் அறங்கள் என்று அவரடி சாரும் மடயர்களே யன்றி, தன்மானம் உள்ள எவனாகிலும் ஒப்புவானா?

திரு. இராசாசி அவர்கள் 1938-இல் பதவியில் இருந்தபொழுது 2500 பள்ளிக்கூடங்களை மூடியதற்கும், மீண்டும் பதவிக்கு வந்த