பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

77


இதில் உள்ள 12 சொற்களில் 4 சொற்களே தமிழ்ச் சொற்கள். அவற்றிற்கும் வடமொழிச் சொறக்ளையே போட்டிருக்கலாம். தங்களின் கேடான எண்ணங்களைப் பிறர் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடுமே என்று அவற்றைச் செய்யாது விடுத்தனர் போலும் ! தமிழுக்கு இவ்வளவு கேடு செய்துகொண்டுவரும் நேரத்திலேயே, அவர்தம் மொழிக்கு எவ்வளவு அக்கறை காட்டப் பெறுகின்றது என்பதற்கு, அதே தாளில் அதே நாளில் வெளிவந்த கீழுள்ள செய்தியையும் பாருங்கள்.

“இது மகாரிஷிகளின் சமஸ்கிருதம் - நமது வேதங்கள் அனைத்தும் தர்மத்தை ஆதாரமாகக் கொண்டவை. வேதங்கள் உப-வேதங்கள் எல்லாவற்றையும் புதுப்பிக்க இந்த சதஸ் முயல்வது குறித்து சந்தோஷம்” என்று ‘ஸ்ரீவெங்கடேஸ்வர ஆலய சம்ஸ்கிருத சதஸ் ஆண்டு பூர்த்தி விழாவில், பெரிய ஜியர் பூரீரங்கராமானுஜ ஜியர் ஸ்வாமிகள் தலைமையில், ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி பூர் சங்கராச்சாரிய ஸ்வாமிகள் சதஸ்ஸைத் துவக்கி வைத்து அருளுரை நிகழ்த்தினார்”.

எப்படி...? ஒருபுறம் தமிழுக்குக் கேடு, மறுபுறம் ஆரியத்திற்குப் பாடு! இவ்விரண்டு முயற்சிகளுக்கும் பயன்படுவது அரசினர் பணம் அல்லது அரசினர் கை வைக்க இயலாத - தேவையானால் இன்னும் போட்டு நிரப்புகின்ற கோயில் பணம். திருப்பதி கோயில் அதிகாரி கொடுத்த அறிக்கைப்படி மேற்குறித்த ‘ஸ்ரீ வெங்கடேஸ்வர சமஸ்கிருத சதஸ்’ தொடங்கிய மூன்று மாதக் காலத்தில் அவர்களின் திருவிளையாட்டிற்குச் செலவிடப்பெற்ற பணம் நாற்பத்தேழாயிரம் உருபா அழைக்கப்பட்ட பார்ப்பன வேத பண்டிதர்கள் 200 பேர்; ‘வேத பாராயணக்காரர்கள்’ 400 பேர் செய்த பணி பார்ப்பனர்களைத் தேவர்களாக்கும் ஆரியப் பூசல்களைப் பரப்புதல் ! தமிழ்மொழியை அடிமைப்படுத்தும் சமற்கிருதத்தை எழுப்புதல். போதுமா ? தமிழன் துரங்கிக் கொண்டிருக்கிறான் அல்லது அடிமைப்பட்டுக் கிடக்கிறான் என்பதற்கு இன்னும் என்ன சான்று வேண்டும்?

இதோ இன்னொரு பார்ப்பனக் குறும்பு!

நூற்றுக்கணக்கான கோடி உருபாக்களைக் கொட்டி மணலைப் புரட்டிக் கரியைத் தோண்டிய நெய்வேலியின் கைவண்ணமெல்லாம் தமிழன் செய்தவை. அங்கிருக்கும் கட்டிடங்கள் தெருக்கள் எல்லாம் தமிழரைக் கொண்டு கட்டப்பெற்றன. ஆனால் அங்குக் குடியமர்ந்தவர்களோ கெடுப்பது தமிழ்க்குடிகளை - தமிழ் மொழியை! தொழில் முறையாலும் அதிகார முறையாலும் அங்கு நீக்கமற நிறைந்திருக்கும் ஆரியப் பேய்களின் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க