பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


உண்மைகளைப் புரிந்துகொண்டால், நாம் இந்த இடர்ப்பாடான நேரத்தில் செய்ய வேண்டுவது என்ன என்பது திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது.

தன்துணை யின்றால், பகையிரண்டால்; தானொருவன்
இன்துணையாக் கொள்கவற்றில் ஒன்று.

பகைத்திறந்தெரிதலில் வருகின்றது இக்குறள். எதிர்க்கப்படுவோன் தான் ஒருவன்; அவன் தனக்குத் தன் இனத்தைத் தூக்கி நிறுத்தும் துணைவன் ஒருவனுமிலன்; அவனுக்கு உற்ற பகையோ இரண்டு. இந் நேரத்தில் அவன் செய்ய வேண்டுவது என்ன? அந்த இரண்டு பகைகளிலும் எந்தப் பகை ஓரளவு இனிய பகை; அல்லது எளிதே களையத் தகுந்த பகை என்பதைப் பார்த்தல் வேண்டும். அவ்வாறு பார்த்து எப்பகை எளிதே களையத் தக்கதோ அப்பகையையே துணையாகக் கொண்டு தனக்கு நெடுநாளைய பகையாகிய, தன் உட்பகையாக இருந்தே நலங்கெடுக்கும் ஒரு பகையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதே குறள் நமக்குக் காட்டும் நெறியாகும். இக்காலத் தமிழர்களின் இடர்ப்பாட்டிற்கு, முன் கூட்டியே வழிகாட்டியாக எழுதி வைக்கப்பட்டதாகத் தெரிகின்றது இக்குறள்.

வடவரின் அரசியல் வல்லாண்மையால் நமக்கு நேரடியான - முழுமையான தீங்கு இன்னும் ஏற்பட்டுவிடவில்லை. அவரின் - அல்லது அவர் ஏறியுள்ள பேராயக் கட்சியின் வண்டி இன்னும் நமக்கு எதிர்ப்போக்காக நிறுத்தப்படவே இல்லை. மொழித் துறையிலும் அதன் உட்கிடையான அரசியல் துறையிலும் வடவரின் கை இன்னும் ஓங்கிவிடவில்லை. அப்படியே அஃது ஓங்கினாலும் தமிழர்களின் பெருத்த கிளர்ச்சியால் அவ்வாட்சி வண்டி கவிழப் போவது உண்மை! ஆனால் அவ்வாறு கவிழ்க்கப்படும் ஆட்சி வண்டியில் தமிழனே ஏறவேண்டுமேயன்றி ஆரியப் பார்ப்பனரைத் தப்பித் தவறியும் ஏற்றிக்கொள்ளுதல் கூடாது. அவரைப் பற்றிய ஐயம் தமிழர்க்குத் தீர இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் போதல் வேண்டும். அத்துணை அளவில் அவர்களின் நச்சுச் செய்கை தமிழர்களை நிலைகுலைத்திருக்கின்றது. எனவே, தமிழன் தான் கைப்பற்றிய அரசியல் வண்டியில் தானே ஏறத் தகுதி பெறும் வரை - தன்னுணர்வும் தன்னாற்றலும் தன்னாண்மையும் பெறும் வரை, இவன் நமக்கு நன்றாகத் தெரிந்த கொள்ளையனோடு கூட்டுப் போதல் பல்லாற்றானும் தீங்கு பயப்பதே ஆகும். அக்கூட்டு எவ்வகைக் கூட்டாயினும் நமக்குத் தீதே! ‘குடியாட்சி அமைப்பில், தேர்தல் விளையாட்டில் நாம் கலந்துகொள்வதைத் தவிர்த்தல் இயலாது; அப்படித் தவிர்ப்பது அரசியலாகாது’ என்று அரசியலை