பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


பலர். உலகத்தின் மாபெரும் மறவன் அலெக்சாந்தரும் அவ்வினத்தின் நச்சுச் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டான் எனின், இவ் வடவர்கள் எம் மூலை ? அவர்களால் மூவாயிரம் ஆண்டு ஊடுருவலாலும், போராட்டத்தாலும் முற்றும் வீழ்த்தப்படாத தமிழினத்து அவ்வப்பொழுது தோன்றிய பெருந்தலைவர்களும் பேரறிஞர்களுமே காரணம்! ஆரியர்கள் குடம் குடமாகக் கொட்டிய நச்சுக்குத் திரிந்திடாத உயர்தனிப்பால் தமிழ் மொழியே! இதை நாம் உணர்வாலோ, தமிழ்மேல் வைத்த பற்றாலோ, தமிழர்மேல் வைத்த கரிசனத்தாலோ கூறவில்லை. மெய்யுணர்வோடு, பகுத்தறிவுக் கண்கொண்டு, அரசியல் குமுகாயப் பாடங்கொண்டு கூறும் உண்மைக் கருத்துகளாகும்.

எனவே இந்திய நாட்டு அரசியலில் திரு. இராசாசி அவர்கள் ‘ஓர் அரசியல் நரி’ என்றும், எவர் ஆட்சிமேடை ஏறினும் அவர் ஆட்சியைக் கவிழ்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார் என்றும், தமக்கும் தம் இனத்திற்கும் தக்காரையே அவர் ஆட்சியில்’ அமர்த்த விரும்புவர் என்றும், அல்லது அப்படி அமர்ந்தவரைத் தமக்கும் தம் இனத்திற்கும் நலஞ் செய்வதற்கே ஆட்படுத்துவர் என்றும், இவ்விடர்ப்பாடுகளிலும் இடிபாடுகளிலும் தமிழர் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருப்பதே நன்று என்றும் அறிந்துகொள்க.

- தென்மொழி, சுவடி : 4, ஓலை : 11, 1966