பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


குடியரசு நெறியாக உள்நாட்டினர்க்கும் வெளிநாட்டினர்க்கும் வலிந்து காட்டப்பெற்று வருகின்றது. ஆரிய பபார்ப்பனரின் வேதப் பிராமணணரின் இந்து சமய வெறியே, இந்தியரின் பண்பாட்டுச் சிறப்பாகவும், உயர்ந்த மக்கள் நெறியாகவும் வலியுறுத்திப் பேசப்பட்டும், பரப்பப்பட்டும் வருகின்றது. இவர்கள் இருவர் தம்போக்குக்கும் முயற்சிகளுக்கும் ஏற்ற படைக்கருவிகளாக இருப்பன செய்தித்தாள்கள், வானொலி, சமய குலப்பாகுபாடுகள், பகுத்தறிவற்ற பழக்க வழக்கங்கள். அண்மையில் வெளிவந்த செய்திப்படி, இந்தியாவில் ஏறத்தாழ 5000 ‘சாதியமைப்புகள் உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வேறுபாடுகள் அத்துணையும் இயற்கையாகவே ஏற்பட்டன என்று சொல்லமுடியாது. ஆரியப் பார்ப்பனர் வருகைக்குமுன் தமிழர்களைப் பொறுத்த அளவில் தொழில் பாகுபாடுகளே இருந்தன என்றும், அவற்றுள் உயர்வு தாழ்வு வேறுபாடுகள் கிடையாவென்றும் வரலாற்று நூல்கள் குறிக்கின்றன. பார்ப்பனரே இவற்றுள் ‘வருணாசிரம தர்மம்’ என்ற இனவேறுபாட்டு முறையைப் புகுத்தினர் என்பதாகவும் அவை கூறுகின்றன. இவற்றை அவர்கள் புகுத்தியதன் நோக்கம் சிறுபான்மையரான தங்கள் இனத்தைப் பெரும்பான்மையரான தமிழரினம் அழித்து ஒழித்துவிடாமல் தங்களைக் காத்துக் கொள்வதற்காகவும், சாதி வேற்றுமைகளால் பாகுபாடு செய்யப்பெற்ற அச்சிறு சிறு கூட்டங்களிடையில் தம் செல்வாக்கை வலுப்படுத்தவுமே என்றும் மேனாட்டாசிரியர் சிலர் துணிந்து குறிப்பிட்டுள்ளனர். தங்களுக்குப் பயன்படாத ஆட்சியினை எவ்வகையாலும், எவரைக் கொண்டேனும் ஒழித்துவிட வேண்டும் என்பதாகவே, பார்ப்பனர் தம் வேதங்கள், உபநிடதுகள் முதலியன குறிப்பிடுகின்றன. இன்ன ஓரை (இராசி)யில் பிறப்பவன் சூத்திரனாகவே பிறப்பான். அவன் பிராமணர்களுக்குக் கேடுகளையே செய்வான் என்பதாகக் கூட அவர் தம் கணியநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களுக்குக் கல்விக் கண்களைத் திறப்பதே பெரிய கரிசு(பாவம்) என்றெல்லாம் அவர்தம் நெறிநூல்கள் சாற்றுகின்றன. இவற்றிற்கெல்லாம் சான்றுகள், அடிப்படைகள் ஆயிரக்கணக்காக உள்ளன. அவற்றை யெல்லாம், இங்கெடுத்துக் கூறுவதானால் இக்கட்டுரை ஒரு பெரிய நூலாகவே விரியும்; மேலும் அவைபோன்ற எடுத்துக்காட்டுகள் ஏற்கனவே தென்மொழியில் பலமுறை வெளியிடப் பெற்றுள்ளன.

மேலே கூறப்பெற்ற நெறிமுறைகள் எல்லாம் ஒன்றுவிடாமல் பார்ப்பனரால் இன்றும் செவ்வையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவற்றைத் தம் மக்கள் என்றும் மறந்து போகாமல் கடைப்பிடித்து