பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

93

கருவிகளான செய்தித்தாள்கள், வானொலி வாய்ப்புகள், பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் சற்றும் பொருந்தி வராத இந்து சமயப் பூசல்கள், வேத புராணப் பழக்க வழக்கங்கள் முதலியவற்றைக் கொண்டு, அவர்கள் எத்தகைய பெரிய அரசையும் கவிழ்த்துவிட முடியும், எத்தகைய பெரிய குமுகாய அமைப்பையும் மாற்றி அமைத்துவிட முடியும். எவ்வளவு மிகுதியாகக் கற்றவரையும் உருச்சிதைத்துவிட முடியும்; தாங்கள் எவ்வளவு புறக்கணிக்கப் பெற்றுத் தங்களை எத்துணைக் கீழ்ப்படியில் கொண்டுபோய் நிறுத்தினாலும் மேலே கொண்டு வந்து உய்வித்துக்கொள்ள முடியும். பொதுவாக தம் போக்கிற்கு மாறாக உள்ள எவ்வளவு வலிமை மிகுந்த எதிரிகளையும் முறியடித்துவிட முடியும். இவற்றை உடனடியாகச் செய்யமுடியாமற் போனாலும் படிப்படியாகவேனும் அவர்களால் செய்து கொள்ளமுடியும். இனி, இத்தகைய வேலைகளை அவர்கள் நேரடியாகச் செயய் முடியாமற் போனாலும் எதிராளர்களில் உள்ள பேராவற்காரர்களையும், பேதைகளையும், பட்டம், பதவி தசையாளர்களையும், அநுமவீடனப் பிரகலாதன் போன்றவர்களையும், வையாபுரி, முத்துச்சண்முகம், முத்தையன், பக்தவத்சலம், சுப்பிரமணியம் போன்றவர்களையும் கொண்டாவது தங்கள் உளக்கருத்துகளைச் செயற்படுத்திக்கொள்ள முடியும்.

மேலே குறிப்பிடப்பெற்ற வகைகளிலன்றி, இன்னொரு வகையிலும் தமிழினம் தாழ்த்தப்பட்டும், சிதைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றது. அதுதான் பண்பாட்டையும், இனவுணர்வையும், தன்மானத்தையும் தம் உடற்பசிக்கும், வயிற்றுப் பசிக்கும், மனப்பசிக்கும் விலை போக்கிக் கொண்டுள்ள ஆதித்தன் போன்றவர்கள் நடத்தும் கழிசடை இனக்கவர்ச்சி இழிநிலை யிதழ்களால் காசு திரட்டும் கயமைச் செயல்கள். அவர்கள் நடத்தும் தாள்களால் தமிழ்ப்பண்பாடே கெட்டுச் சீரழிந்து குட்டிச் சுவராகிவிட்டது. இவர்களால் ஏற்பட்ட குமுகாய ஒழுக்கச் சீர்கேடுகளை, நூறு குன்றக்குடிகளும், கிருபானந்தவாரிகளும், மூலிகைமணி ஆசிரியர்களும் வந்தாலும், சொல்லாலோ, சமயவுணர்வாலோ மருந்து மனவியல்களாலோ அகற்றிவிட முடியாது என்பதை எல்லாத் தமிழர்களும் தெள்ளிதின் உணர்ந்துகொள்க. ஏனெனில் அவ்வகைத் தாள்களில் எழுதும் எழுத்தாளர்களும் கயவர்களும் தங்கள் தூவல்களைச் சாய்க்கடையிலும், மலக்கரைசல்களிலும் தொட்டு மேனாட்டு கண்ணாடித் துணிகளின் மேலேயே எழுதிவருகின்றனர்.