பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


7. வெளிநாட்டு வாணிகம் கி.மு. 1000 - 500

பாலஸ்தீனமும் இந்தியாவும்

கி.மு. பத்தாம் நூற்றாண்டில், ஷிபாவின் அரசி {Queen of Sheba) சாலமன் அரசனுக்கு (King of Solomon) ‘மிளகு போலும், உணவுக்கு மணமூட்டும் பொருள்களின் மிகப்பெரிய குவியலையும், கிடைத்தற்கரிய மதிப்பு மிக்க ரத்தினக் கற்களையும் கொடுத்தாள். ஷீபா அரசி, சாலமன் அரசனுக்குக் கொடுத்த, மணப்பொருளின் இக்குவியல் போலும் ஒரு மணப்பொருள் குவியல் மீண்டும் வரவேயில்லை. (IKings. X:10). அந்நாட்களில், இப்பண்டங்கள், இந்தியா விலிருந்துதான் மேற்கு நாடுகளுக்குச் சென்றன. இம்மணப் பொருள்களும் நவரத்தினங்களும், அரசியின் கைகளை அடைவதற்கு முன்னர், அவை இந்தியப் படகுகளில், ஆப்பிரிக்கக் கடற்கரையை அடைந்தன என உறுதியாகக் கூறலாம்.

‘'ஒப்ஹியரிலிருந்து ஒப்ஹியர் (Ophir) பொன்னை ஏற்றி வந்த ஹிராம் (Hiram) கப்பல் படையும், அங்கிருந்து ஏராளமான அகில் மரங்களையும், நவரத்தினங்களையும் கொண்டுவந்தது. அரசன், அகில் மரம் கொண்டு, இறைவன் திருக்கோயில், அரசன் பெருங்கோயில்களுக்கான தூண்களையும், இசைவாணர்களுக்கு வில்யாழ், விரல் தெறித்து இசையெழுப்பும் நரப்புக் கருவிகளைச் செய்தான். அதன்பின்னர், அத்துணைப் பெருமளவிலான அகில் மரங்கள் இந்நாள் வரை வரவில்லை, காணப்படவும் இல்லை ,'’ (1 Kings X:11-12). இந்த அகில் மரங்கள், சந்தன மரங்களாக அடையாளம் காணப்பட்டன. அல்முக் (Aimug) என்ற அதன் ஆங்கிலப் பெயர், சமஸ்கிருத வலகு” என்பதன் திரிபாகக் கருதப்பட்டது. தென் இந்தியாவின், சிறப்பாக, மைசூர், கோயமுத்தூர், சேலம் மாவட்டங்களின் உள்நாட்டுப்