பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

தமிழர் பண்பாடு


செங்கண் இரும்புலி குழுமும்; அதனால்
மறைத்தற் காலையோ அன்றே;
திறப்பல்; வாழி, வேண்டு; அன்னை நம் கதவே”
                  - குறுந்தொகை : 321

காதலர் இருவரையும் ஒன்றுபடுத்துவதின் முன்னர், சமுதாய முறைப்படி இன்றியமையாது நடைபெற வேண்டிய களவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மணிமுடியாம் திருமணத்தைக் காதலன் காலம் கடத்திக் கொண்டே வந்தால், அவன் காதலியை நோக்கி வந்தபோது, தோழி. வரைந்துகொள்வது விடுத்து, இவ்வாறு வருவதைக் கைவிடுக’ எனக் கூறி மறுத்து அனுப்புகிறாள். “ஓ மலை நாடனே! மழை பெய்து ஓய்ந்த மேகங்கள், மலையிலே சென்று இடங்கொண்டுவிட்டன; தேனடைகள் தொங்கும் - மலையுச்சியிலிருந்து, அருவிகள் ஆரவாரம் செய்து கொண்டே உருண்டோடி வீழ்கின்றன; அழகிய மலையில் நிற்கும் வேங்கை மரங்கள் நாட்காலையில் நறுமண மலர்களைக் கொட்டுகின்றன, தன் தோகை அழகோடு, அவ்வேங்கை உதிர்த்த மகரந்தப் பொடிகளாலும் மூழ்கப்பெற்று மகிழ்ந்து ஆடி இளவெயில் இன்பத்தை நுகர்கின்றன மயில்கள். இத்தகு இன்பக் களஞ்சியமாய்த் திகழும் மலைநாட்டுக்கு உரியனாகிய நீயோ, இவளுக்கு நீங்குதல் இல்லாக் காமநோயைத் தந்துள்ளாய். இதை .. யாரிடத்தில் கூறி நோவேன்? வந்து புணர்ந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும், இனிய சொற்களை இவள் விரும்பு மாறு கூறுகின்றனை; அவ்வாறு கூறும் நீ கூறியவாறே நடந்து மணந்துகொள்வதே, இவள் உயிரைக் காக்கும் வழியாம் என்பதை மட்டும் கூறியதை மறுத்து மயங்கு கின்றனை; இதை நான் யாரிடம் சென்று முறையிடுவேன்?'’

“பெய்துபோகு எழிலி வைகுமலை சேரத்
தேன் தூங்கு உயர்வரை அருவி ஆர்ப்ப,
வேங்கைதந்த வெற்பு அணி நன்னாள்
பொன்னின் அன்ன பூஞ்சினை நுழைஇக்
கமழ்தாது ஆடிய கவின்பெறு தோகை