பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

தமிழர் பண்பாடு


தழுவினான். அதனால் அவன் மேனியின் முல்லை மணம் என் தோள்களில் இன்றும் வீசா நிற்கும்”

“மட்டம் பெய்த மணிக்கலத்து அன்ன
இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையிற் கறங்கும் நாடன்,
தொல்லைத் திங்கள் நெடுவெண் நிலவின்
மணந்தனன் மன் நெடுந் தோளே :
இன்றும் முல்லை முகைநா றும்மே”
-குறுந்தொகை : 193

‘பரல்கற்கள் மலிந்த பாலை நிலத்தில் வளர்ந்து ஓங்கி நிற்கும் மீன் குத்திப் பறவை போலும் முளைகளையுடைய கள்ளிச்செடி மீது படர்ந்து தழைத்திருக்கம் முல்லையின் மணம் மிக்க மலர்களை, எப்போதும் ஆடிக் கொண்டிருக்கும் தலையை உடையவாகிய ஆட்டுமந்தையை மேய்த்துவரும் வலிய கையையுடைய இடையன் இரவிலே கொய்து பனம் குருத்தின் பிளவினால் தொடுத்த மாலையின் நியமணம், மலைப் போதில் தெருவெங்கும் கமழும் சிறிய குடிகளை யுன்

‘'பரல்தலை போகிய சிரல்தலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீநறு முல்லை
ஆடுதலைத் துருவின் தோடுதலைப் பெயர்க்கும்
வன்கை இடையன் எல்லிப் பரீஇ
வெண்போழ் ததைஇய அலங்கலம் தொடலை
மறுகுடன் கமழும் மாலைச்
சிறுகுடிப் பாக்கம்”
                - நற்றிணை : 169 : 4-10

“தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும் பெரிய தலையினை உடைய கரிய எருமையை, அதனிடமிருந்து மிக இனிய பாலை நிரம்பக் கொள்வான் வேண்டி, அவற்றின் கன்றுகளை அத்தொழுவத்திலேயே விட்டுவிட்டு, ஊரில் மாடு மேய்க்கும் இளம் சிறுவர்கள், அவ்வெருமைகளின் மேல் அமர்ந்து கொண்டு மேய்புலம் நோக்கிக் கொண்டு செல்லும், நிறை இருள் மெல்ல மெல்லக் கழியும் விடியற்காலம்.'’