பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை

159


முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரீஇ மலிந்து ஒலியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி".
                - நற்றிணை : 710 : 1-8


மலைகளைச் செய்துவைத்தது போல் காட்சி அளிக்கும் அடி பரந்து மிக உயர்ந்த நெல் நிறைந்திருக்கும் பல கூடுகளையுடைய , ஏர்களில் எருமைகளைப் பூட்டி உழுகின்ற உழுவ! மறுநாள் நடைபெற வேண்டிய உழவுப் பணிகள் பற்றிய ஆராய்ச்சியில் இருந்து விட்டமையால் கண்ணுறக்கம் கொள்ளாமல் இருந்து, குளிர்ந்த விடியற்போதிலேயே எழுந்து கொண்டு, கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரிய பெரிய துண்டுகள் மிதக்குமாறு பண்ணி வைத்திருக் கும் குழம்போடு உண்பதற்கு ஏற்ப நன்கு தீட்டப்பட்ட அரிசியால் ஆன சோற்றுத் திரளைக், கை நிறைய வாங்கி வாங்க உண்டு முடித்து, நீர் நிறைந்திருக்கும் நன்செயில், நாற்றுக்களை நட, உன்னோடு தொழிலாற்றும் நாற்று நடுவாருடன் நீ செல்கின்றனை.

மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின்
பெருநெல் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாது, தண்புலர் விடியல்
கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு
கவர்படு கையை கழும் மாந்தி நீருறு செறுவில்
நாறுமுடி அழுத்தநின் நடுநரோடு சேறி"
                - நற்றிணை : 60 : 1-8

உழவர் மகளின் அன்றாடக் கடமை, உணவு சமைத்தல் - ஆகும். அவள் காதலன், அவள் பெற்றோரின் விருந்தோம்பும் பண்புக்கு ஏற்ப, அம்மனைபுகும் விருந்தினருள் ஒருவனாகச் சென்று, தன் காதலியைக் கண்டு மகிழ்வதோடு, உழவர்வாழ் சிற்றூர்களின் மனை வாழ்க்கையின் மாண்பு எத்தகையது என்பதை நாம் அறியவும் செய்துள்ளான்.

வளைந்து நீண்ட கொம்புகளையுடைய எருமையின்