பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தமிழர் பண்பாடு


தளர்ந்த நடையுடையவாய இளம் கன்றுகள் வீட்டுத் தூண்கள் தோறும் கட்டப்பட்டுக் காண்பதற்குக் களிப் பூட்டும் நல்ல மனையின் கண், வளைந்த குண்டலங் களைக் காதில் அணிந்து கொண்டிருக்கும், செழித்த உடல் நலம் உடையவளாகிய நம் காதலி, சிறிய கல் மோதிரம் செறிக்கப்பட்ட மெல்லிய விரல்கள் சிவந்து போகுமாறு, வாழையின் குளிர்ந்த இளம் தண்டை , சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அடிசில் ஆக்குதலால், புகை படிந்து சிவந்த கண்களை உடையளாகி, அழகு உண்டாகுமாறு, பிறைவடிவான நெற்றியில் உண்டாகியிருக்கும் சிறுசிறு துளிகளான வியர்வையைத் தன்னுடைய அழகிய சேலைத்தலைப்பால் துடைத்துக் கொண்டு , சமையல் முடிந்தும், கணவன் வந்திலனே என்ற நினைப்பால் நம் மீது கொண்ட சினத்துடன் அட்டிற் சாலையில் இருக்கிறாள். விருந்தினராய் வர விரும்புவார் என்னோடு வருவார்களாக; விருந்தினர். முன்னே, அழகிய மாமை நிறம் வாய்ந்த என் காதலி, என்னைச் சினந்து கண் சிவந்து காட்சி தரமாட்டாள், முள்போலும் சிறிய பற்கள் சிறிதே தோன்றப் புன்னகையே. காட்டுவள்; அவளின் சிரிதே முகத்தை நானும் கண்டு மகிழ்வேன்”

"தடமருப்பு எருமை மடநடைக் குழவி
தூண்தொறும் யாத்த, காண்தகு நல்இல்,
கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேழை ,
சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப,
வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகை இப்
புகை உண்டு அமர்ந்த கண்ணன், தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்
அந்துகில் தலையில் துடையினள், நப்புலந்து
அட்டிலோளே, அம்மா அரிவை!
எமக்கே, வருகதில் விருந்தே; சிவப்பாளன்று;
சிறிய முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண் கம்மே"
                      - நற்றிணை - 120