பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை

179


வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை 179 வெளி யேற்றினர். [Warmington. Page : 381 நாணயப் பணங்களை ஏற்றுமதி செய்வதில், தொடக்கத்தில் ஒரு மோசடி வெளிப்படையாகவே செய்ய முயலப்பட்டது. அகஸ்டஸ் நாணயத்திற்குப் பதிலாக, அவனுடைய தத்துப் பிள்ளைகளாம், கையஸ் (Gaius) லூசியஸ் (Lucius) என்பார் உருவங்கள் பொறிக்கப்பட்ட பொன்னுக்குப் பதில் முற்றிலும் பொன் முலாம் பூசப்பட்ட நாணயங்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவில் கைம்மாறின. உள்நாட்டு மக்கள், போலி நாணயங்களிலிருந்து, உண்மையான உரோம நாணயங்களை, இன்னமும் வேறுபிரித்து உணரமாட்டா, தென் இந்தியாவோடு நடத்தும் வாணிகத்திற்காகவே அத்தகைய நாணயங்களை , இன்னமும் வேறுபிரித்து உணரமாட்டா, தென் இந்தியாவோடு நடத்தும் வாணிகத் திற்காகவே அத்தகைய நாணயங்கள் தனியாக அடிக்கப்பட்ட னவாக எர்னஸ்ட் (Ernst) எண்ணுகிறார்" எனக் கூறுகிறார் திருவாளர் வார்மிங்டன் [Warmington p. 139]. ஆனால், தமிழர்கள் கூர்மதிவாய்ந்தவர் என்பதை உறுதி செய்து விட்டனர். காரணம், அற்பத்தனமான அச்சோதனை மீண்டும் முயலப்படவில்லை. இந்நூற்றாண்டு கால அளவில், மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வணிகப் பொருள்கள் யாவை?

உயிர்விலங்குகளின் ஏற்றுமதி

பண்டைக்காலத்து இந்தியர்கள், உயிர் விலங்குகளைக் கடல்வழியாகப், பர்ஷிய வளைகுடாவிற்கும், ஆப்பிரிக்கா விற்கும், சீனாவுக்கும் அனுப்பி வைத்தனர். இரண்டாம் தாலமியின் மயில்களையும், கிளிகளையும், அனுப்பி வைத்தமைக்கும் அவர்களே, பெரும்பாலும் பொறுப்பாவர். ஏதன்ஸ்க்குச் செல்யூகஸ் (Seleucus) நன்கொடையாக வழங்கிய புலி, சுல்லாவும் (Sulla) பாம்பெயும் (Pampey) காட்சிப் பொருளாகக் காட்டிய சிங்கங்கள், ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகம், மெர்ஸலஸ் (Mercllows) நகரின் ஆடரங்கு அர்ப்பணிக்கப்பட்டபோது, கூண்டிலோ குகையிலோ அடைத்துக் காட்டப்பட்ட புலி, ஆகிய