பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

தமிழர் பண்பாடு


விலங்குகள், சில வட இந்தியாவையும் சில தென்னிந்தியா வையும், சேர்ந்தவை, நிலவழியாக அனுப்பப்பட்டனவாம். ஆனால், கிரேக்க எழுத்தாளர்கள் பலரும், தங்கள் நூல்களில் குறிப்பிட்டிருக்கும் குரங்குகள், கடல்வழியாகவே சென்றிருக்க வேண்டும். (Warmington 147, 148, 151) அலெக்ஸாண்ட ர் வெற்றிக்குப் பின்னர், சண்டைகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட இந்திய யானை, பயரஸ் (Pyrrhus) என்பான், சில யானைகளைக் கி.மு. 28ல், ஐரோப்பாவிலிருந்து இத்தாலிக்கு இடமாற்றி அனுப்பப்பட்டபோது உரோமானியர்களுக்கு முதன்முதலாக அறிமுகமாக்கப்பட்டது. கார்த்த கினியர்கள் (Carthaginiars) அவற்றை , ஆப்பிரிக்க யானைகளோடு பயன் கொண்டு அவ்விரு இனங்களையும் பழக்க, இந்திய யானைப் பாகர்களை நியமித்தனரா என்பதை, என்னால் உறுதியாகச் சொல்ல இயலாது. ஆனால், கி.மு. 25ல் பனோர்மோஸ் (Panormos) எனும் இடத்தில் ஹாஸ்ட்ருபால் (Hastrubai) இந்தியர்களால் செலுத்தப்பட்ட யானைகளைப் பயன்படுத்தினான் என்பது குறிப்பிடத்தக்கது. உரோமப் பேரரசோடு நடத்திய இரண்டாம் புனிக் (Punic) போரில், ஹனிபால், ஹாஸ்ட்ருபால் (Hannibal, Hasdrubal) இருவரும் அதுவே செய்தனர். ரபியா (Rapia) எனுமிடத்தில் நடைபெற்ற போரில் தாலமியின் லிபியா நாட்டு விலங்குகள், ஆண்டியோ சொஸ் என்பானின் இந்தியப் படைகள் முன் நிற்க முடியவில்லை." (Warmington, Page 151)

இந்திய வேட்டை நாய்கள், வெளிநாட்டவரால், மிகுவிலைக்குரியவாக மதிக்கப்பட்டன. “ஹொரோ டோடஸ் கூற்றுப்படி, தம் காலத்தைச் சேர்ந்த பர்ஷியர், பாபிலோனியாவைச் சுற்றியிருந்த நான்கு பெரிய சிற்றூர்களின் வருவாய்களை, இந்திய வேட்டை நாய்களின் உணவிற்கு என்றே நிதிஒதுக்கம் செய்துவைத்தனர். பர்ஷியாவைச் சேர்ந்த இந்திய வேட்டை நாய்களும், அவைபோலும் வேறுநாய்களும், தாலமி, பிலடெல்பாஸ் வெற்றி ஊர்வலத்தில் காணப்பட்டதாக, திரு. ஸ்டெசியாஸ் (Ctesias) குறிப்பிடுகிறார். கொடிய கரடியோடு நடத்திய போராட்டத்தில், தன் தலைவனைக் காப்பதற்காகத் தன் உயிரைக் கொடுத்த