பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் சமஸ்கிருத நாகரீகத்தின்...

193


ஒன்றோடொன்று உறவு கொள்ளாத, பல்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை. அடிப்படை அமைப்பிலேயே அவை, ஒன்றோடொன்று மாறுபடுகின்றன. அதனால், ஒரு மொழியின் சொல்லிலக்கண அமைப்புக்குள், வேறு ஒரு மொழியின் சொல்லிலக்கண அமைப்பைத் திணிப்பது இயலாது என்பன போலும் உண்மைகள் அகத்தியனார்க்குத் தெரியா. சமஸ்கிருதம் விரிவான , சொல்லிலக்கண வகைகளைக் கொண்ட தனக்கே உரிய, சொல்லுரு மாற்று மொழி. ஆனால், தமிழ், தனி இரு சொற்கள் இணைந்தே தொகைச் சொற்களை உருவாக்கவல்ல எளிய தெளிவான சொல்லிலக்கணத்தையுடைய , ஒரு மொழியாகும். சமஸ்கிருத முற்றுத் தொடர் வாக்கியங்களில், சொல்லுக்குச் சொல் உள்ள , சொற்றொடர் உறவு, அச்சொற்களின் இலக்கண உறவு உணர்த்த, அச்சொற்களின் ஈற்றில் இணைக்கப்படும் விகுதிகளினால் மட்டுமே உணரலாகும். ஆதலின், சொற்கள், வாக்கியத்தில் எங்கு வேண்டுமானாலும் இடம் கொள்ளலாம் என்பது, அம்மொழிநிலையாகத், தமிழ் சொற்களை வேண்டியவாறெல்லாம், இடம் மாற்றச் செய்ய இயலா, உறுதியான சொற்றொடர் நிலையினைக் கொண்டுளது. சமஸ்கிருத மொழியின் இவ்விகுதிகள், தம் நிலையில் பொருள் உணர்த்தும் சொல்லாக இடம் பெற மாட்டார் சொல்லீறுகளினால் ஆக்கப்பட்டனவாம் ஆதலின், தங்களுக்கெனப் பொருள் இல்லாதன. ஆனால், பொருள் உணர் சொற்களில், உறவினை உணரத் துணைபுரிவன ஆகும். இவைபோலும் சொல்லீற்று விகுதிகளை ஏற்றுக் கொள்வதனால், வேர்ச்சொல், வெறும் மூலமாக மாறி, அம் மூலமும் தனக்குத்தானே தடம் காணமாட்டா மிகப்பெரிய மாறுதலுக்கு ஆளாக்கிவிடுகிறது. இவ்வகையில் தத்' என்ற மூலம், 'அம் என்ற ஈறு ஏற்று "தேஸாம்" என ஆகிறது. ஹன்" என்ற வினைவேர்ச்சொல் பெறும் பல உருமாற்றங்களில் ஒன்று, "ஜக்ஹான என்பது. அதுபோல டஹ்" என்பதன் உருமாற்றம், அட்டொக்" என்பதாம். இவை, விகுதிகள் இணைவால், சொற்களின் இயலும் உருவமும் வேறுபடும் மொழிகளின் அடையாளங்களாம்.