பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் சமஸ்கிருத நாகரீகத்தின்...

195


பிரிவுகளைத் தமிழ் வேற்றுமை உருபுகளாகக் கொள்கிறார். பாணினியைப் பின்பற்றித் தமிழில், அவர், ஏழு வேற்றுமைகளைக் காண்கிறார். சரியாகச் சொல்வதானால், உருவாக்குகிறார். அவர் மாணவர் தொல்காப்பியனார், ஐந்திரம் வழிச் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்களைப் பின்பற்றி, அவற்றை எட்டு ஆக்குகிறார். காதலிபின்' என்பது "காதலி" என்பதன் வேற்றுமை உருபேற்ற பெயராயின், காதலி எதிர்" என்பதும் வேறுமை உருபேற்ற பெயராகாதோ? இம்முறையில் கணக்கிட்டால், தமிழ் மொழியில் உள்ள பெயர்ச்சொற்களிலிருந்து, பெறலாகும் வினையெச்சப் பெயரெச்சத் தொடர்கள் எத்தனை உளவோ, அத்தனை வேற்றுமைகளைத் தமிழ்ப் பெயர்கள் கொண்டிருக்க வேண்டும்.

தமிழில் சமஸ்கிருத ஏழு வேற்றுமைகளை இறக்குமதி செய்தது போலவே, சமஸ்கிருத செயப்பாட்டு வினையையும் அவர், இறக்குமதி செய்துள்ளார். செயப்படுபொருள் குன்றாவினை செயப்படுபொருள் குன்றியவினை ஆகிய எல்லா வினைச் சொற்களும், சமஸ்கிருதத்தில் அடையும், உறுதியான சொல் திரிபே. அம்மொழி, செயப்பாட்டு நிலை, செயப்படுபொருள் குன்றாவினைகள், செயப்பாட்டு வினையாக மாறும் பொழுது, அவ்வினைகள், "சிங்கம் கொல்லப்பட்டது" என்பதில் உள்ளதுபோல், செயப்படு பொருளைச், செய்வினை முதலாம் எழுவாயாக மாற்றும் அப்பணியினைச் செய்கிறது. வினை முதலாம் எழுவாய் தெரியாத போது, அல்லது அவ்வினை முதல் குறிப்பிடத் தேவையில்லாதபோது, அல்லது செயப்படுபொருள் வற்புறுத்தி உணர்த்தத் தேவைப்படும் போது இவ்வாறு வழங்குவது, பயனுடையதாகிறது. செயப்படுபொருள் குன்றிய வினைகளுக்குச் செயப்பாட்டுத் திரிந்த வடிவங்கள் தரப்படும்போது, இது போலும் அடிப்படைப் பயன் எதுவும் காணப்படுவதில்லை; என்றாலும் செயப்பாட்டுவினை ஆட்சியால், எவ்விதச் சிறப்புப் பொருளும் பெறப்படுவதில்லையாகவும், சமஸ்கிருதத்தில், செயப்படுபொருள் குன்றிய செயப்பாட்டு வினையாட்சி, செய்வினை ஆட்சியினும், மொழிநடை உடையதாம். அதன்படி, ஸஹ்ப்ஹ வதி