பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

தமிழர் பண்பாடு


கொண்டு செல், பாண! நின் தண்துறை ஊரனை
பாடுமனைப் பாடல் கூடாது, நீடுநிலைப்
புரவியும் பூண்நிலை முனிகுவ;
விரகில் மொழியல்; யாம் வேட்டது இல்வழியே”.
                  - நற்றிணை : 380.

போற்றா ஒழுக்கம் உடையராகிய பரத்தையரின் பிடிக்குள் அகப்பட்டுக் கொள்ளும் ஆடவர் செய்யும் தவறுகளுக்கு அளவே இராது என்பது நோக்கிக், கணவரை ஏற்க மறுக்கும் மனைவியரின் பிடிவாதத்தின் நியாயத்தன்மை உணரப்படும் பரத்தையர் ஒழுக்கம் கொண்ட கணவனால் புறக்கணிக்கப் பட்டாள் ஒருத்திக்கு அவள் தோழி கூறுவது, இது; “அன்னை போலும் அன்புடையாய்! நறிய நெற்றியையுடைய அரிவையே! காதில் குழை அணிந்து மார்பில் மாலை சூடி, கையில் தொடி அணிந்து விழாக் களத்தில் துணங்கை ஆடிக்கொண்டிருக்கும் தலைவனைக் கைப்பற்றிக் கொண்டுவந்து விடலாம் என்று, என் அறியாமையால் ஆசைப்பட்டு, விழாக்களும் நோக்கிச் சென்று கொண்டிருக் கும்போது, நம்மிடம் அயலான் போல் நடந்துகொள்ளும் அவன், நெடிய பெரிய தெருக்கோடியில், ஒரு வளைவான இடத்தில் வேறு ஒரு வழியாகத் திடுமென வந்து எதிர்ப்பட, அவனை, “மனையாளைப் பிரிந்து பரத்தையர் பின் திரியும் உன்னைக் கண்டித்துக் கேட்பார் யாரேனும் உளரோ? அல்லது ஒருவருமே இலரோ'’ என்று நான் கேட்க, அவன் அதுபற்றி ஏதும் கருதாதான் போல், என்னைப் பார்த்து, ‘உன் நெற்றிப் பசலை நனிமிகு அழகு” என்று கூறினான். பகைவராலும் பாராட்டத்தக்க பெரும் சிறப்புடையான் என்பதை மறந்துவிட்டு, “நண்ப! நீ ஒரு நாணிலி” எனக் கடிந்து கூறிவிட்டேன்”

"அறியாமையின் அன்னை ! அஞ்சிக்
குழையன், கோதையன், குறும்பைத் தொடியன்:
விழவயர் துணங்கை தழுஉகம் செல்ல,
நெடுநிமிர் தெருவில் கைபுகு கொடுமிடை,
நொதும லாளன் கதும் எனத் தாக்கலின்,