பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

261


'கேட்போர் உளர்கொல்? இல்லை கொல்? போற்று' என
'யாளது பசலை', என்றனன்; அதன் எதிர்'
“நாணிலை எலுவ!” என்று வந்திசினே;
செறுநரும் விழையும் செம்மலோன், என,
நறுநுதல் அரிவை! போற்றேன்;
சிறுமை பெருமையின் காணாது, துணிந்தே".
                     - நற்றிணை : 50

துணங்கையாவது, ஆடவரும் பெண்டிரும் பங்கு கொள்ளும் ஒருவகை ஆடல்; ஆடுங்கால், கைகளை வளைத்து ஒருவரையொருவர் தழுவிக்கொள்வர். அது, மக்களைப் போலவே, பேய்களுக்கும் பொதுவானது. ”கண்டாரை உளம் நடுங்கப் பண்ணும் நடையும், கண்டார்க்கு அச்சம் ஊட்டும் உருவமும் உடைய பேய்மகள். செங்குறுதி துழாவிய கூரிய நகங்களைக் கொண்ட விரல்களால் கண்களைத் தோண்டி உண்ணப்பட்டுவிட்ட முடை நாற்றம் உடைய கரிய பிணத்தின் தலையைத் தொடியணிந்த கையில் ஏந்திக் கொண்டு, பகைவர்க்கு அச்சம் வருமாறு, எதிர் சென்று அழிக்கும் போர்க் களத்தைப் பாடித் தோள் குலுங்க அப்பிணத்தைத் தின்னும் வாயுடையவளாய்த் துணங்கைக் கூத்து ஆடா நிற்கும்".

"உருகெழு செலவின், அஞ்சுவரு பேய்மகள்,
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல்,
கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி, வெருவர
ஏன்று அடு விறற்களம் பாடித்து, தோள்பெயரா
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க".
திருமுருகாற்றுப்படை 57-56

யாழ் இசைக்கும் பாணரும் கூத்து ஆடும் கூத்தரும் கூத்தியரும், நடனமாடும் விறலியரும் ஒன்றுகலந்தே வாழ்வர். ஒருவருக்கு ஒருவர் துணைபுரிந்து கொள்வர். அவர்கள், பெரும்பாலும் பேரரசர்களாலும், குறுநிலத் தலைவர் களாலும் பேணப்படுவர். அவர்களில் ஒரு குழுவினர்,