பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


தெளிவாயிற்று. நீர் உறைநிலைக்கு மேலும் வெப்ப நிலைகள் பதிவாயின.

போருக்குப்பின்

இரண்டாம் உலகப் போரின் பொழுது பல நாடுகள் மறைவாக ஆர்க்டிக் ஆராய்ச்சியை மேற்கொண்டன. ஆர்க்டிக் பகுதி வளர்ச்சியில் உருசியா கவனம் அதிகம் செலுத்தியுள்ளது.

போருக்குப்பின் அமெரிக்காவின் வானிலை உற்று நோக்கு விமானங்கள் வடமுனை வழியாகச் செல்லத் தொடங்கின.

அமெரிக்காவும் கனடாவும் பல வானிலை நிலையங்களை அமைத்துள்ளன. இவை கனடா விற்கு வடக்கே உள்ள தீவுகளில் அமைந்துள்ளன. தென்மேற்குக் கிரீன்லாந்தில் தூல் என்னுமிடத்தில் அமெரிக்கா ஒரு பெரிய விமானத் தளத்தைக் கட்டியுள்ளது.

1957 இல் கனடாவைச் சார்ந்த ஆர்க்டிக் பகுதியில் ஒரு விரிவான ரேடார் நிலையத்தை அமெரிக்கா அமைத்தது. துருவ வழியாக நடைபெறும் விமானத் தாக்குதலை முன் கூட்டி அறிந்து, அதைத் தவிர்த்து, அமெரிக்காவைப் பாதுகாக்க இந்நிலையம் அமைக்கப்பட்டது. இன்று ஆர்க்டிக் பகுதியில் உரிமை கொண்டாடும் நாடுகள் அதில் ஆராய்ச்சி நடத்தி வருகின்றன.

நில இயல் நூல் ஆண்டின் பொழுது ஆர்க்டிக் ஆராய்ச்சியில் 12 நாடுகள் கலந்து கொண்டன.