பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44


ஆர்க்டிக் கோடை

கோடையின்பொழுது பனி உருகி ஓடும். பூக்கள் தலைகாட்டும். மரங்கள் அவசர ஆடை உடுத்தும். மைய இரவுக் கதிரவன் (midnight sun) உண்டாவதும், நிலைத்த ஒளியுள்ள காலம் இருப்பதும் அரும்பெரும் நிகழ்ச்சியாகும். அதே போல மூன்று மாதங்களுக்கு தொடுவானத்திற்குக் கீழ்க் கதிரவன் மறையும் போது நீண்ட இருட்டு படரும். ஆனால், வனப்புமிக்க வடமுனை ஒளிகள் இரவு வானத்தை வெளிச்சமாக்கும் இந்த ஒளிகள் இருட்டுக்கு மாற்றாக அமைகின்றன.

எத்தபாஸ்கன் இந்தியர்கள்

எஸ்கிமோக்கள் வாழும் பகுதிக்குத் தெற்கே சில மைல் தொலைவிலுள்ள கனடா ஏத்தபாஸ்கன் இந்தியர்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர். இவர்களுக்குப் போதிய உடையோ, உறைவிடமோ இல்லை. பகலில் இயங்கிக் கொண்டே இருப்பர். இவர்கள் தூங்கும்பொழுது கூட உடல் நடுங்கும்.

சுருங்கக் கூறுமிடத்து, இங்குள்ள நிலையான குளிர்ச்சி , இருட்டு, உலர்ந்த காற்று ஆகியவை. ஆய்வுக் கூடங்களிலும் அவற்றிற்கு வெளியேயும் வேலை செய்யப் பெருந்தடையாக உள்ளன . அமெரிக்கா, உருசியா, கனடா ஆகிய நாடுகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர் இங்குப் பனி வீழ்ச்சி, பனிக்கட்டித் தோற்றம், பனியாறுகள் இயக்கம், வானிலை, ஓய்ந்தொழிந்த எரிமலைகள் முதலியவை பற்றிப் பயன் தரும் வகையில் ஆராய்ந்துள்ளனர்.