xxii
வாயிலில்” (1955) எனும் மூன்று பகுதிகள் கொண்ட நாவலை எழுதினார். எஸ். ஸோரியன் “ஒரு வாழ்வின் கதை” என்ற தாவலை (1935-1939) உருவாக்கினார். இஸட். எஸாயன் “ஸிலிஹ்தரின் தோட்டங்கள்” என்ற குறுநாவலைப் (1935) படைத்தார். இப்படைப்புகளிடையே வி. டோடோவென்ட்ஸின் குறுநாவல் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. ஆழ்ந்த உணர்வு, இதிகாசத் தன்மை, மென்மையான சோகம், கடக்க இயலாத ஒரு ஏக்கம் ஆகியவற்றுடன் அது எழுதப்பட்டிருக்கிறது. அவரது பிறந்த இடத்தின் சித்திரங்களும், அவருடைய சொந்தக்காரர்களின் முக்கிய அம்சங்களும் சிறுபருவ நிகழ்ச்சிகளும் நினைவுகளும் அவர் உள்ளத்தில் அவ் உணர்ச்சிகள் பொங்கி எழக் காரணங்கள் ஆயின.
ஏ. பாகுன்ட்ஸ் 1920கள் 1980கள்காலகட்டத்தின் ஆர்மேனிய உரைநடை இலக்கியத்தின் முக்கியக் கர்த்தாக்களில் ஒருவராவார். தொழிலால் அவர் ஒரு விவசாய இயல் நிபுணர். ஆர்மேனிய கிராமங்களில் அவர் தொழில்புரிந்ததால், அக் காலத்திய ஆர்மேனிய கிராமங்களில் நிலவிய வாழ்க்கையின் குண இயல்புகளைப் பிரதிபலிக்கும் ஜீவசித்திரங்களை இந்த எழுத்தாளர் இலக்கியத்தில் ஆக்கினார். பாகுன்ட்ஸ் மூன்று சிறு கதைத் தொகுப்புகளை வெளியிடுவதில் வெற்றிகண்டார். அவரது பிறந்த ஊரான கோரிஸின் வாழ்வையும் தன்மைகளையும் வர்ணிக்கும் ஒரு குறுநாவலை (“க்யோரெஸ்” 1935) அவர் எழுதியிருக்கிறார். முற்றுப்பெறாத இரண்டு நாவல்களை (“கார்மெராகார்”, “காச்சாதூர் அபோவியன்”) அவர் விட்டுச் சென்றார். அவற்றில் அவருடைய தேடல்கள் ஒரு இதிகாசப் போக்கில் அமைந்திருக்கின்றன. “ஆல் மலை வயலட் பூ” (1926) என்ற கதை அவரது மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று ஆகும். வாழ்க்கையைக் கவிதை நோக்கில் புரிந்துகொள்ளல் (ஓவியன் பாத்திரம்); கவிதை உணர்வே இல்லாது வரலாற்றுப் பழம்சின்னங்களைத் தேடல் (ஆராய்ச்சியாளன் பாத்திரம்); வாழ்வின் கவலைகள் குழப்பங்களுக்கிடையே கவிதைத் தன்மை மாண்டு மறைந்துவிடுதல் (குடியானவன் மனைவி உருவம்); கடுமையான யதார்த்தம் (குடியானவன் உருவம்) ஆகிய பண்புகள் இந்தக் கதையில் நுண்மையாகக் கலந்து காணப்படுகின்றன. பொதுவாக, பாகுன்ட்ஸின் படைப்புகளில் காணப்படுகிற விசேஷமான தன்மைகளில் நுண்மை உணர்வும் ஒன்று ஆகும். வசனகவிதை வடிவத்திலும் இசைக்காவியத் தன்மையோடும் அது வெளிப்படுகிறது. மலைப்புறக் கிராமங்களில் வசிக்கிற விவசாயிகளது ஆத்மாக்களின் அழகுகளையும்