பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鲨盛 வயிறு தின்பது, முடிவேயில்லாமல் தின்பது-அதுதான் அவனது அடங்காத அவா. காலை முதல் இரவு வரை, அவனுடைய பேச்சு, செயல், திட்டம் எல்லாம் தின்பதைப்பற்றியே இருந்தன. அவன் 5ಣ இருக்கையிலிருந்து எழுந்து, உணவுப் பதார்த்தங்கள் இருக்கிற அலமாரி அருகே போய், அதைத் திறந்து, அதன் இண்டு இடுக்குகள் பூராவும் ஆசையோடு தேடுவான். சட்டி பானைகளின் மூடியைத் திறந்து பார்ப்பான். எப்போதும் ருசிகரமான எதையாவது கண்டுகொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு, அல்லது தீவிர விருப்பத்தோடு, சிறு துணிகளின் மடிப்புகளைக் கலைத்து ஆராய்வான். தன் வாயில் போட்டுக்கொள்ள ஒரு துணுக்கைக்கூடக் காளுதபோதும், அவன் திறந்த அலமாரியின் முன்னே நெடுநேரம் யோசனையில் மூழ்கியவாறு நின்றுவிடுவான். தினம் ஒவ்வொரு மணி நேரமும் இப்படிச் செய்துகொண்டே இருப்பான். வீட்டில் எந்த இடத்திலாவது ஏதேனும் ரொட்டி இருந்தால் அதை நொடிப்பொழுதில் அந்தத் தச்சன் தின்று தீர்த்து விடுவான். கண்ணுக்குப் புலனாகாத இடுக்குகளில் அவன் மனைவி சர்க்கரைக் கட்டியில் முக்கால்வாசியை மறைத்து வைப்பாள். ஆயினும், தச்சன் சிறிதளவு ரொட்டிக்காக, அல்லது மொச்சைக்காக, நெடுகத் தேடிக்கொண்டேயிருப்பான். வீட்டில் ஒன்றுமே இராது; உயிரைக் கொடுத்தால்கூட எதுவும் கிடைக்காது. அவனுடைய பசி அதிகரித்தது: உக்கிரமாக வளர்ந்தது. தச்சன் பெருமூச்செறிவான். அவன் வாய் கோணி, எச்சில் வழியும். அவன் உதடுகளைச் சப்பியபடி தனது இருப்பிடம் திரும்புவான். சுவரின்மீது முதுகையும் தலையையும் சாய்த்துக்கொண்டு, எதிர் சுவரில் உள்ள ஒரு புள்ளி மீது தனது அரைக்கண் பார்வையைப் பதிப்பான். மணிக் கணக்கில் அதே நிலையில் இருப்பான். - அவன் துரங்குவான். எனினும், அது தூக்கம் அல்ல. கனவுக் காட்சிகள் தோன்றியவாறிருக்கும். வான்கோழியின் தொடைக்கறி, பருப்புகள் கலந்து பக்குவப் படுத்தப்பட்ட ஆற்று மீன், மீன்கறி சேர்ந்த கொழுக்கட்டை, ஆட்டு இறைச்சியாலான கறிவகைகள், இப்படிப் பலவும் திணவெடுத்த அவன் கற்பனையில் தோன்றும். எல்லையிலாப் பெரும் விருந்து, பசியைக் கிளறிவிடும் வகைவகையான பானங் களோடு, அவன் முன்னே பரப்பப்பட்டிருக்கும். சுவை தரும் மணங்கள் காற்றில் கலந்திருக்கும். . -