பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

21



சூலாயுதம் கொண்டு
யம தூதர் வந்து என்னைச்
சூழ்ந்து கொண்டால்
வேலாயுதா என்று
கூப்பிடுவேன் அந்த
வேளைதனில் மாலான
வள்ளி தெய்வானை
யொடு மயில் விட்டு இறங்கி
காலால் நடந்து
வரவேணும் என்
கந்தப்பனே

என்று பிரார்த்தித்துக் கொள்கிறார் ஒருவர். மயிலில் ஏறிவந்தால் கூட காலதாமதம் ஆகிவிடுமாம். கால தாமதம் இல்லாமல் காலால் உடனே நடந்து வந்து விடவேண்டும் என்று ஆசைப்படுகிறார். என்ன ஆசை பார்த்தீர்களா? ஆறெழுத்து மந்திரத்தினை நினைத்து நினைத்து உரு ஏறிய உள்ளமல்லவா இப்படி எல்லாம் பேசுகிறது.