பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

பாஸ்கரத் தொண்டைமான்





5
திருச்செந்தூர்


ஆறுமுகன் கோயில் கொண்டிருக்கும் இடங்கள் ஆறு என்பதை நக்கீரர் விளக்கமாக உரைக்கிறார். அவை திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருஆவினன்குடி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்சோலை என்பதையும் அறிவோம். இந்த இடங்களே முருகனது படைவீடுகள் என்றும் குறிக்கப்படுகின்றன. இந்தப் படை வீடுகளில் ஒன்றான திருச்சீரலைவாய் என்பதே இன்றைய திருச்செந்தூர். பண்டைத் தமிழ் நூல்களில் இந்தத்தலம் திருச்சீரலைவாய், செந்தில் என்று மட்டுமே குறிக்கப்பட்டிருக்கிறது.

வெண்டலைப் புணரி, அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைகிய காமர் வியன்துறை

என்று புறநானூற்றில் கூறப்பட்டிருக்கும் இடத்திலே

திருமணி விளக்கின் அலைவாய்ச்
செருமிகு சேய்

தங்கி இருக்கிறான் என்று அகநானூறு கூறுகின்றது.

அலைவாய்ச் சேரலும், நிலைஇய பண்பே

என்று நக்கீரர் சொல்வதையே


சீர்கெழு செந்திலும், செங்கோடும்
வெண் குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்

என்று சிலப்பதிகாரம் விளக்குகிறது. சிவபிரானைப் பற்றிப் பேச வந்த நாவுக்கரசரும்,