பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

75



சிறு பிள்ளையாக இருக்கும்போதே முருகன் அருள் பெற்றவராய் அமைந்ததினாலேயே என்னவோ, முருகனை இளைஞனாக, சிறு குறும்பு செய்யும் பிள்ளையாக வழிபடுவதிலேயே ஆர்வங்காட்டி இருக்கிறார். முருகனது அழகில் ஈடுபட்டவர் அருணகிரியார் என்றால், அவனது இளமை நலத்திலே ஈடுபட்டவராக குமரகுருபரர் இருந்திருக்கிறார்.


நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத போதமாய் - ஆதிநடு
அந்தங் கடந்த நித்தியானந்த போதமாய்
பந்தந் தனந்த பரஞ்சுடராய்

இருப்பவன் இறைவன் என்ற அரிய பெரிய தத்துவக் கருத்துக்களை எல்லாம் எல்லோரும் உணரும்படி சொன்னவர்தான் என்றாலும், அவர் ஈடுபாடு எல்லாம், முருகனது அவதாரத்தில், பிரமனுக்கு பிரணவத்தைக் குருமூர்த்தமாக நின்றுரைத்த நிலையில், அத்தோடு வள்ளியை மணக்க அவர் செய்த லீலா விநோதங்களிலேயே நிலைத்து நின்றிருக்கிறது. இளமையிலேயே கவிபாடும் திறம் பெற்றவர். இள முருகனின் விளையாட்டுகளிலேயே திளைத்து நின்றது அதிசயமில்லை தானே? ஐந்து முகத்தோடு அதோமுகமும் பெற்று அத்திருமுகங்கள் ஆறில் நின்று எழுந்த ஆறு சுடர்களும் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உருப்பெற அந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்து அணைத்தே அறுமுகவனை அன்னை உருவாக்கினாள் என்றும் கந்தன் திரு அவதாரத்தை அழகொழுகச் சொல்கிறார்.


அறுமீன் முலையுண்டு அழுது விளையாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறு முறுவல்
கன்னியோடு சென்று அவட்குக் காதல்
உருக்காட்டுதலும்.
அன்னவள் கண்டு அவ்வுருவம் ஆறினையும்
தன்னிரண்டு
கையால் எடுத்தணைத்துக் கந்தன் எனப்பேர்
புனைந்து
மெய் ஆறும் ஒன்றாக மேவுவித்த

வரலாறு கந்தர் கலி வெண்பாவில் முதலிடம் பெறுகின்றது. இத்தோடு