பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்திமுற்றம் 120 பெறுவதற்கு நெடுங்காலம் தவம் புரிந்தாள். உமா தேவியின் தவத்தை மதித்து ஈசன் காட்சியளித்தான்; ‘ என்ன வரம் வேண்டும் என்று அன்புடன் வினவினான். அப்போது, காதலுற்ற உமையாள் ‘உம்மை இவ்விடத்தில் முத்தமிட வேண்டும் என்று வேண்டினாள். அதற்கு ஈசனும் இசைந்தான். சத்தி முத்தமிட்ட இடம் அன்று தொட்டுச் சத்தி முத்தம் என்னும் பெயர் பெற்றது என்று ஒரு கதை முளைத்தது. இதற்குச் சான்றாக,

“ மட்டார் குழலி மலைமகள்

பூசை மகிழ்ந்தருளும் சிட்டா திருச்சத்தி முற்றத்து

உறையும் சிவக்கொழுந்தே” என்ற தேவாரத் திருப்பாசுரம் எடுத்துக் காட்டப் படுகின்றது.