பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைக்கல மாதா 14?

பெறுவேனோ ? என்றும், திருக்காவலூர்ப் பூஞ்சோலை யில் ஒரு புல்லாய் முளைக்கும் பேறு பெறுவேனோ ? என்றும் பாடுகின்றார் முனிவர்.

இத்தகைய பெருமை வாய்ந்த திருக்காவலூரை அடைந்து, அடைக்கல மாதாவைத் தொழுது அருள் பெற்ற அடியார் பல்லாயிரவர். வறுமை நோயால் வாடினோரும், தொழுநோய் முதலிய வன்பிணியுற்று வருந்தினோரும். அடைக்கல மாதாவின் அடியினை தொழுது துன்பம் நீங்கி இன்பமுற்றனர். அருள் தளிர்க்கும்; ஞானம் தழைக்கும்: வரம் அரும்பும் சீர் பழுக்கும்’ என்று முனிவர் சிறப்பித்த திருக்காவலூர்க் கோவில் இன்றும் கொள்ளிடக் கரையில்

அருள் கனிந்து காட்சி தருகின்றது.