பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 . - ஆற்றங்கரையினிலே

இவ்வண்ணமே திருப்பாவையும் அருளிச் செய்கின்றது? திருமாலே ! எங்கள் பெருமானே ! உன் பொன்னடி போற்றி வரம் ஒன்று வேண்டுகின்றோம். ஐயனே அன்று இன்று எனாதபடி என்றும் யாம் உன் அடியார்கள்; உனக்கு பணி செய்வோம். உன்னை யல்லாமல் வேறு எப்பொருளிலும் எம் சிந்தை செல்லாதிருக்க அருள் புரிவாயாக’ என்று வேண்டுகின்றார் இளம் பாவையர். எனவே மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையும் ஆண்டாள் அருளிய திருப்பாவையும் தமிழ் நாட்டார்க்கு அருள் நெறி காட்டும் இரு கண்கள் என்பதில் ஐயமொன்று உண்டோ?