பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவநாசம் 196

வட மொழிக்கும் தென்மொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக என்று ஒரு சாரார் இந்நாட்டிலே பரப்பிய தவறான கொள்கையை மறுத்து, தென்மொழி யாகிய தமிழின் சிறப்பியல்புகளைப் புலப்படுத்திய புலவர் பெருமான் இவரே ! இவ்வாறு சிவநெறிக்கும் செந்தமிழ் மொழிக்கும் சீரிய தொண்டுசெய்த சிவஞான முனிவர் பாவநாசத்தை யடுத்த சிங்கையம்பதியிலே கோயில் கொண்டு செந்தமிழ் நாட்டைக் காத்தருள்கின்றார்.