இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பின்னிணைப்பு 276
89 : 3. “தந்தை தாயும்நீ
என்உயிர்த் துணையும்நீ
சஞ்சலம் அதுதீர்க்க வந்த தேசிக -
வடிவும்நீ உனையலால்
மற்றொரு துணைகாணேன் அந்தம் ஆதியும்
அளப்பரும் சோதியே
ஆதியே அடியார்தம் சிந்தை மேவிய
தாயுமா னவன்எனும்
சிரகிரிப் பெருமானே.”
- தாயுமானவர்.
13. திருவரங்கம் 93 : 1. “ மெய்யில் வாழ்க்கையை
மெய்யெனக் கொள்ளும்.இவ் வையம் தன்னொடும்
கூடுவ தில்லை, யான் ஐயனே, அரங்கா, என்று அழைக் கின்றேன் மையல்கொண் டொழிந்தேன்
என்தன் மாலுக்கே.”
- குலசேகர ஆழ்வார்.
96 , 2. “ மென்னடை அன்னம் பரந்துவிளை யாடும்
வில்லிபுத் துர்உறை வான்தன்
பொன்னடி காண்பதோர் ஆசையி னால்என்
பொருகயற் கண்ணிணை துஞ்சா
இன்னடி சிலொடு பாலமு தூட்டி
எடுத்தஎன் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே
உலகளந் தான்வரக் கூவாய்.”
- ஆண்டாள்.