பின்னிணைப்பு 284
ஈடுதிரை இராமேச்சுரம் என்றென்று ஏத்தி
இறைவனுறை சுரம்பலவும் இயம்பு வோமே.”
- திருநாவுக்கரசர் தேவாரம்.
122 : 4. “ஆண்டாய்உனைக் காண்பதோர்
அருள்எனக்கு அருளுதியேல்
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே.”
- திருமங்கை ஆழ்வார். 21. குரங்காடுதுறை
123 : 1. “கோலமா மலரொடு தூபமும்
சாந்தமும் கொண்டு போற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார்.”
- திருஞானசம்பந்தர் தேவாரம்.
126 : 2. “ மின்ஒளிர் முடியாய் வென்றவர் தோற்பர்
தோற்றவர் வெல்வர் வெஞ்செருவில்
என்னொடும் பொருவான் இச்சைஉண் டாயின்
இராவணா பொருதி, ஈண்டு என்ன,
கல்நெடும் தோளாய் ! கலங்கினன் வாலால்
கட்டுண்டு பட்டது கிடக்க
இன்னமும் பொரவோ? இனிச்செரு அமையும்
இன்றுநின் தோழன்நான் என்றான்.”
- இராமாயணம், உத்தரகாண்டம்.
129 : 3. “இந்திரன் செம்மல், பண்டோர்
இராவணன் என்பான் தன்னைச்
சுந்தரத் தோள்க ளோடும்
வாலிடைத் தூங்கச் சுற்றி
சிந்துரக் கிரிகள் தாவித்
திரிந்தவன், தேவர் உண்ண
மந்தர கிரியால் வேலை
கலக்கினான் மைந்தன் என்றான்.”
- கம்பராமாயணம்.