இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
233 ஆற்றங்கரையினிலே
36. செப்பறை
203 : 1. “ செப்பறைப் பதியில்
வாழ்சிவத் துவிசன்
கனக சபாபதி
கருதுவட நூற்கடல்
தபோதனர் புகழும்
சைவாதி ராசன்
உபய பதங்களை
உண்மையொடு பணிவாம்.”
tதபோதனர் - முனிவர், உபய பதங்களை . அடிகள் இரண்டையும்)
- இலக்கணக் கொத்து.
203 : 2. “இரத்தினம் போலும்
புவியோர் புகழ இராசவல்லி
புரத்தினில் மேவிய
பாபவி நாச புரவலன்தன்
வரத்தினில் வந்திடும்
மன்னவன் முத்துசு வாமிவள்ளல்
கரத்தினை நோக்கி
மிகநானும் வானுள்ள கற்பகமே.”
(புவி - உலகம், புரவலன் - இரட்சகன்!
- அழகிய சொக்கநாதர் தனிப்பாடல். 204 : 3. “ எங்கள்முத்து சாமிமன்னா இங்கே ஒருவன்மிரு
தங்கமதை ஓயாமல் தட்டினான் - அங்கங்கே கூடிநின்ற பெண்கள்எருக் கொள்வதற்குக்
கூடையெடுத்து ஓடிவந்தார் நீபார்த்தா யோ”
- அழகிய சொக்கநாதர் தனிப்பாடல்.
205 : 4. “நட்டமுண் டோமுத்துச் சாமியைப்
பாடுமின் நாவலர்காள் :