________________
நாயக்கர் மகால் என்பன நாயக்கர் காலக்கட்டடக் கலையை நாடறியச் செய்யும் சான்றுகளாக இருக்கின்றன. நாயக்க மன்னர்க்குப் பின்பு இந்நாடு கருநாடக நவாபின் ஆட்சிக்குட்பட்டது; பின்னர் ஆங்கில ஆட்சிக்கு ஆட்பட்டது.
3. அரசியல்
அரசுரிமை
அரசியலில் தலைமை தாங்கி அனைத்திற்கும் பொறுப் புடையவனாய் நீதிவழுவாமல் செங்கோல் செலுத்தும் கடமை வேந்தனைச் சார்ந்தது. பாண்டிமன்னர் தமக் குப்பின்பு பட்டத்துக்கு உரிய தம் மக்களுக்கு இளவரசுப் பட்டம் கட்டி, அவர்களை அரசியல் துறைகளில் பழக்கு தல் வழக்கம். சில சமயங்களில் அரசர்தம் இளவல் களும் இங்ஙனம் பயிற்சி பெறுதல் உண்டு. முடியரசன் மதுரையில் இருத்தலும், இளவரசன் கொற்கையில் இருத்தலும் இயல்பு. கொற்கை உலகப் புகழ் பெற்ற துறைமுக நகரம்; முத்தெடுக்கும் தொழிலுக்குப் பெயர் பெற்றது; பாண்டிய நாட்டின் செல்வத்திற்கே உயிர்நாடியான நகரம். ஆதலால் அங்கு இளவரசன் இருந்தான். முற்காலப் பாண்டியர் பாண்டிய நாட்டைப் பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஆண்டு வந்தனர்.
அரசியல் அலுவலர்
சங்ககாலத் தமிழரசர் தங்கள் ஆட்சி செம்மையாக நடைபெறுதல் வேண்டும் என்பதற்காக இரண்டு பேரவை களைத் தமக்குத் துணையாகக் கொண்டிருந்தனர். அவை ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்பன. அமைச்சர், புரோ கிதர், தானைத்தலைவர், தூதுவர், சாரணர் என்பவர் ஐம் பெருங்குழுவினராவர். கரணத்தியலவர், கருமவிதிகள், கன கச் சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், பரிவீரர், கரிவீரர் என்பவர் எண்பேராயத்தினர் ஆவர்.
83