பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வல்லிக்கண்ணன் தழல் நடுவின் தீ நாவில் சார்ந்து நிற்பாள்! சாகாத என் கவிதை ஒளிர்ந்து கற்பாள்! றுப் புயலிடையும் நகைப்பாள்! கண்கள் பார்வை முற்றுமவள் கற்று நிற்பாள்! மதுகைக்கத் தனிச் சுவையை ஈயும் ஒப்பில் மாதுளத்தின் முத்தினிலே மகிழ்ந்திருப்பாள் கைக்கு வந்தாலும் எதுகை ஆக்கும் ஈடில்லாப் புலவனுளம் சிரிப்பாள் இங்கே அது கைக்கும் இது கைக்கும் என்பாருக்கும் அம்மானின் மகளழகில் சுவையாய் நிற்பாள் இது கைக்கு வரைய வொண்ணா ஒவியம் தான் எழிற்றாயாள் அழகைத் தான எனன 哆 என்பேன்! சுவையும் கலந்த கவிதை இது, காடு பற்றிக் டியுள்ள பகுதிகளும் படித்துச் சுவைத்து புற வேண்டியவை. எ டுத்துக்காட்டாகச் சில வரிகளை பச்சை மரகதமாய், பன்னூறு அதிசயமாய் இச்சைக் கிசைந்த எழில் மேனித் தன்னொளியாய் ஆடும் பொன் விளக்காய், ஆசை தமை ஒழித்த ஞானியர் தமக்கும் பேர் நல்கும் இருப்பிடமாய், வானை அளாவும் வனப்புள்ள கனமரங்கள் செறிந்து வளர்ந்து திகழ் நிழல் தான் கொடுக்கும் கைபுனைந் தியற்றாக் கவினெல்லாம் இயற்கைத் . தாய. தைபுனைந் தியற்றும் தனிப் பெரும் காவியமாய் இருந்தே அழியாத இன்பத்தை என்றென்றும் அருந்தக் கொடுத்த அழியாத செல்வம் தாய் நிறைந்து நிற்பதன்றோ, நெஞ்சினிக்கும் காடு!”