பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 0 வல்லிக்கண்ணன் கொள்கிற கட்சி மன்றத்தில் பெரும்பான்மை கொண்டு: விட்டால், மக்களாட்சி என்ற பெயரில் என்னென்ன கூத்துக்கள் பணனுகிறார்கள் என்பத்ை எல்லாம் காவிய, வளர்ச்சியோடு கவிஞர் எடுத்துரைக்கின்றார் 'ஒற்றுமையாய் வாழுங்கள், தமிழினம் நாம் உயர்நாட்டால் இந்தியர்கள் உணர்வால் பெற்ற திரு உலகத்தின் குடிமக்கள் நாம். பேரறங்கள் உயிர்மூச்சாய் கொண்டே வாழும் தத்துவத்துக் கொள்கைகள் வெல்ல வேண்டும்!" என்று பெருங்கவிக்கோ தம் விசால நோக்கை வெளிப், படுத்தியிருக்கிறார். இது போற்றப்பட வேண்டிய உயர் நோக்கம் ஆகும்.