பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வல்லிக்கண்ணன் காண்தகு நிலைகள் எல்லாம் கடும் உழைப் பொன்றால் என்ற மாண்பெழில் கொள்கை வெல்லும் வரலாறு படைக்க வேண்டும்! முன்னேற்றம் காண்பதற்கு ஒற்றுமை அவசியம். மக்களின் சக்தியை ஒன்று திரட்ட வேண்டுவதும் அவசிய மாகும். "சக்தியை வீணாக்காமல் சகத்தினில் நமதுநாடு மக்களின் சக்தி ஒன்றே மாஇமயத்தின் உச்சிப் பக்திபோல் ஒளிரவேண்டும் பயன்பெறும் ஒற்றுமையை முக்தியாய் நினைக்க வேண்டும்! முன்னேற்றம் நாளும் வேண்டும்!" மேலும் முன்னேற்றம் குறித்து கவிஞர் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லி, மனசில் பதிய வைக்க முயல் கிறார். 'முன்னேற்றச் சக்தி தன்னை மொத்தமாய்த் திரட்ட வேண்டும்! முன்னேற்ற நன்மை நல்ல முறை வாழ்வோர் கொள்ள வேண்டும்! முன்னேற்றம் நமது நாட்டின் மூச்சாக இருக்க வேண்டும்! முன்னேற்றம் யாண்டும் வேண்டும்: முழுப்பெரும் வெற்றி வேண்டும்! உழைப்பு வெல்ல வேண்டும்; உற்பத்தி பெருக வேண்டும் தழைத்திட வேண்டும் நம்மின் தகுதிகள்